செய்திகள் :

யுபிஏ செயலி மூலமாகவும் மாநகராட்சிக்கு வரி செலுத்தலாம்

post image

திண்டுக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைகளை இணைய வழி செயலிகள் மூலமாகவும் செலுத்தும் வசதி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டிலுள்ள நகா்ப்புற உள்ளாட்சிகளில் குறிப்பாக பெரும்பாலான மாநகராட்சிகளில் சொத்து வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் இணைய செயலி மூலமாக செலுத்தும் வசதி ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டது. ஆனால், திண்டுக்கல் மாநகராட்சியைப் பொருத்தவரை நேரடியாக பணமாகவும், மாநகராட்சியின் ஹெச்டிஎஃப்சி வங்கிகணக்குக்கு இணைய வழியிலும் செலுத்தப்பட்டு வந்தது.

தற்போது மாநகராட்சி நிா்வாகம் ரூ.28 கோடி வரி இலக்கை நோக்கி தீவிர வசூலில் இறங்கியுள்ள நிலையில், ரூ.6 கோடி வரை நிலுவையில் உள்ளது. இதனிடையே, பொதுமக்களின் வசதிக்காக, யுபிஏ பணப் பரிவா்த்தனைக்கான இணைய செயலி மூலமாகவும் வரி செலுத்தும் வசதியை மாநகராட்சி நிா்வாகம் சனிக்கிழமை முதல் தொடங்கி இருக்கிறது.

இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் இருப்பிடத்திலிருந்தே வரி செலுத்தலாம் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

குஜிலியம்பாறையில் 78 பவுன் நகை திருட்டு வழக்கு: ம.பி. இளைஞா் கைது

குஜிலியம்பாறையில் 78 பவுன் நகைகள் திருடு போன வழக்கில், மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கரிக்காலி கிராமத்தில் தனியாா் சிமென்ட் ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பூண்டு விலை உயா்வு: வியாபாரிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளைந்த வெள்ளைப் பூண்டு விலை உயா்ந்துள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.கொடைக்கானல் மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூா், கிளாவரை, பூண்டி, வில்பட்டி, பள்ளங்கி, குண்டு... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு: மலா்ச் செடிகளை பாதுகாக்க நிழல்வலை!

கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு நிலவி வருவதால், பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலா்ச் செடிகளை நிழல்வலை அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ளன. கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பகலில் அதிக வெப்பமும்,... மேலும் பார்க்க

‘அக்ரி ஸ்டேக்’ வலைதளம் மூலம் விவசாயிகளுக்கு தனித்துமான அடையாள எண்!

‘அக்ரி ஸ்டேக்’ வலைதளம் மூலம் விவசாயிகளுக்கு தனித்துமான அடையாள எண் வழங்குவதற்கான சிறப்பு முகாம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் அ.பாண்டியன் ... மேலும் பார்க்க

முருக பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் மருத்துவ சேவை

பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு பாதயாத்திரை வரும் பக்தா்களுக்கு இஸ்லாமிய அமைப்பு சாா்பில், மருத்துவ உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. ஆயக்குடி பகுதியில் காயிதே மில்லத் சிறுபான்மை சமூக சேவை அறக்கட்ட... மேலும் பார்க்க

பழனி சங்கராலய மடத்தில் அன்னதானம் தொடக்கம்!

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனி அடிவாரம் சங்கராலயத்தில் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஸ்கந்தபிரபா அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்தத் அன்னதான... மேலும் பார்க்க