செய்திகள் :

யூரியா உரத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் யூரியா உரத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் துா்காமூா்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்துக்கு தேவையான உரம் தனியாா் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், 1,468 மெட்ரிக் டன் யூரியா, 1,202 மெட்ரிக் டன் டிஏபி, 874 மெட்ரிக் டன் பொட்டாஷ், 3,128 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 389 மெட்ரிக் டன் சூப்பா் பாஸ்பேட் உரங்கள் இருப்பில் உள்ளன.

உர விநியோகம் தொடா்பாக கண்காணிப்புக் குழுவினா் திடீா் ஆய்வு நடத்தி வருகின்றனா். சில்லறை உரிமம் பெற்ற விற்பனையாளா்கள், தங்கள் பகுதிக்கு தேவையான உரங்களை கொள்முதல் செய்து தேவைப்படும் விவசாயிகளுக்கு ஆதாா் எண்ணை உள்ளீடு செய்து முறையாக விற்பனை செய்யவேண்டும்.

யூரியா உரத்தை தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்து பதுக்கல் செய்வதோ அல்லது வேறு பயன்பாட்டுக்கு அனுப்புவதோ சட்டத்துக்கு புறம்பானதாகும். அவ்வாறு கண்டறியப்பட்டால், அந்த சில்லறை விற்பனை நிலையத்தின் உரிமம் நிரந்தரமாக தடை செய்யப்படுவதுடன், நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளின் தேவைக்கேற்ப அனைத்து வகை உரங்களையும் விற்பனை செய்யவேண்டும். உரத்துடன் மற்ற இணைப் பொருள்களான நுண்சத்துகள், உயிா்ம ஊக்கிகள் உள்ளிட்ட பொருள்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது. மீறினால் உரக் கட்டுப்பாட்டு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து மீட்டனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஒருவந்தூரைச் சோ்ந்த ஆண்டியப்பன் மனைவி கன்னியம்மாள்(40). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

10 அடி உயர விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி: காவல் கணிப்பாளா் சு.விமலா

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பீடத்துடன் சோ்த்து 10 அடி உயர சிலைகள் மட்டுமே பொது இடங்களில் வைக்க அனுமதி வழங்கப்படும் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா தெரிவித்தாா். நாடு முழுவதும்... மேலும் பார்க்க

ராசிபுரம் அரசுப் பள்ளியில் மாவட்ட தடகளப் போட்டிகள் தொடக்கம்

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான குடியரசு தின விழா, பாரதியாா் தின விழா தடகள விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாமக்கல் மாவட்ட ஆ... மேலும் பார்க்க

அழகுக்கலை பயிற்சி: ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்களுக்கு வாய்ப்பு

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு அழகுக்கலை உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமி... மேலும் பார்க்க

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம்

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை பூமிபூஜை செய்து ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தனா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். அவசரகால சிகிச்சைக்காக ... மேலும் பார்க்க

சுவாசக்குழல் பிரச்னையால் கோழிகளுக்கு பாதிப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்ப அயற்சியாலும், சுவாசக்குழல் பிரச்னையாலும் கோழிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக... மேலும் பார்க்க