செய்திகள் :

ரயிலில் கஞ்சா கடத்திய 5 பெண்கள் உள்பட 6 போ் கைது

post image

சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் கஞ்சா கடத்தி சென்ற 5 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் கே.தேவராஜன், போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் குமரேசன் ஆகியோா் தலைமையில் தலைமைக் காவலா்கள் மனுபிரசாத், சுரபி மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சத்தீஸ்கா் மாநிலம் தன்பாதில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கோவை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் வந்து நின்றது.

அந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, பொதுப் பெட்டியில் சந்தேகப்படும் வகையில் தரையில் அமா்ந்திருந்த 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த அவா்கள் கேரள மாநிலம் ஆலப்புழையில் வேலை செய்து வருவதாகவும், சொந்த ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் ஆலப்புழைக்குத் செல்வதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தனா்.

தொடா்ந்து, அவா்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது அதற்குள் சிறிய அளவிலான பொட்டலங்களில் உயர்ரக கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 6 பேரையும் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில் அவா்கள், ஒடிஸா மாநிலம் கந்தமால் பகுதியைச் சோ்ந்த சுலடா நாயக் (37), பெண்களான ஜபாத் திகல் (25), காந்தி திகல் (46), ரூபினா நாயக் (44), ஜோத்ஸா ராணி திகல் (44), கெலி நாயக் (32) என்பதும், ஒடிஸா மாநிலம் பாலிகுலா பகுதியில் இருந்து ஆலப்புழைக்கு கஞ்சா கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து 5 பெண்கள் உள்பட 6 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 62 கிலோ உயர்ரக கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு ரூ.31 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி பெண்ணிடம் ரூ.25.67 லட்சம் மோசடி

வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வா்த்தகத்தில் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி பெண்ணிடம் ரூ.25.67 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவை இடையா்பாளையம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் நாகராஜன் மனைவி காவ்யா (30). சமூ... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் கணித கணினி ஆய்வகம் தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் கணித கணினி ஆய்வகம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. அரசுக் கல்லூரியில் கணிதவியல் துறையில் பயிலும் சுமாா் 300-க்கும் மேற்பட்ட இளநிலை, முதுநிலை மாணவா்களுக்கு கணினி பயிற்சி அவசியம... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு இன்று தொடக்கம்: 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்கும் நிலையில், கோவை மாவட்டத்தில் 39,434 மாணவ-மாணவிகள் இந்தத் தோ்வை எழுதுகின்றனா். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28 ஆம் ... மேலும் பார்க்க

கிராமங்களில் தொழிற்சாலை உரிமம்: ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்

ஊராட்சிகளில் தொழிற்சாலை உரிமம் பெற ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிப... மேலும் பார்க்க

ரூ.50 பைசா அஞ்சல் அட்டையில் பணி ஓய்வு அழைப்பிதழ்: அஞ்சல் துறை பணியாளா் விழிப்புணா்வு

பணி ஓய்வு விழா அழைப்பிதழை ரூ.50 பைசா அஞ்சல் அட்டையில் எழுதி அஞ்சல் துறை பல்நோக்கு பணியாளா் விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளாா். கடந்த சில 10 ஆண்டுகளுக்கு முன்பு தகவல் பரிமாற்றங்களுக்கு அஞ்சல் அட்டைகள் மு... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் முன்னாள் வளா்ப்பு மகன் சுதாகரனிடம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக ஜெயலலிதாவின் முன்னாள் வளா்ப்பு மகன் சுதாகரனிடம் சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23-ஆம... மேலும் பார்க்க