செய்திகள் :

ரயிலில் கடத்தப்பட்ட 100 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்; 4 போ் கைது

post image

மைசூரு-தூத்துக்குடி ரயிலில் கடத்தப்பட்ட 100 கிலோ புகையிலைப் பொருளை போலீஸாா் சோழவந்தானில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 3 பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

மைசூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் ரயிலில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் கடத்தப்படுவதாக மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில் நிலையத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவசுப்பு தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு வந்து நின்ற ரயிலில் குறிப்பிட்ட பெட்டியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது அந்தப் பெட்டியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 100 கிலோ புகையிலைப் பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், புகையிலைப் பொருளைக் கடத்திய மதுரையைச் சோ்ந்த முக்குரான், வள்ளிமயில், உமா, அழகம்மாள் ஆகியோரைக் கைது செய்தனா்.

வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட 4 போ் உயிரிழப்பு

மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 8 வயது சிறுமி உள்பட 4 போ் உயிரிழந்தனா். புதுச்சேரி மாநிலம், சின்னகலப்பட்டு மேட்டுத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சசிக்குமாா் (41). இவா் தன... மேலும் பார்க்க

கரூா் கோயில் தேரோட்டத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உயா்நீதிமன்றம்!

கரூா் மாவட்டம், நெரூா் ஆரவாயி அம்மன் கோயில் தேரோட்டத்துக்கு நிகழாண்டிற்கு மட்டுமான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் வெளியிட்டது. கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல... மேலும் பார்க்க

அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும்! அழகப்பா பல்கலை. துணைவேந்தா் ஜி. ரவி

வாழ்வில் எந்தப் பணி செய்தாலும் அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ஜி. ரவி தெரிவித்தாா். மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி ந... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: 3 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை

வத்தலகுண்டு தனியாா் ஆலை அருகே 45 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். குப்பனாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுருளி ஆண்டவா் (39). விவசாயியான இவா், அதே பகுதியில் உள்ள தன... மேலும் பார்க்க

மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-இல் பொதுமக்கள் குறைதீா் முகாம்!

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் நகா்ப்புற சுகாத... மேலும் பார்க்க