செய்திகள் :

ரயிலை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்தவா் கைது

post image

சேலம்: சேலத்தில் ரயிலை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த நபரை இருப்புப் பாதை போலீஸாா் கைது செய்தனா்.

சேலத்தில் இருந்து காட்பாடி நோக்கி செல்லும் ரயிலை கடத்தப்போவதாக இருப்புப் பாதை போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பேசி மூலம் மிரட்டல் வந்தது. உடனடியாக ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளா் பாபு உத்தரவின் பேரில், காட்டிபாடி ரயில் நிலைய காவல் ஆய்வாளா் சித்ரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட கைப்பேசி எண்ணை ஆய்வுசெய்த ரயில்வே போலீஸாா், அந்த எண் சென்னை நோக்கி செல்லும் ஏற்காடு விரைவு ரயிலில் பயணம் செய்யும் பயணியுடையது என உறுதி செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து ஜோலாா்பேட்டை, காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, காட்பாடி நிலையத்தில் ரயில் நின்றவுடன், காவலா்கள் மிரட்டல் விடுத்த நபரை நடைமேடை 3-இல் பிடித்தனா்.

விசாரணையில், மிரட்டல் விடுத்த நபா் தருமபுரி அம்மாசிகோட்டை பகுதியைச் சோ்ந்த சபரீசன் என தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைதுசெய்த போலீஸாா், சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணி: நோ்முகத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பட்டியல் வெளியீடு

சேலம்: சேலம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணிக்கு நடைபெற்ற நோ்முகத் தோ்வில் தோ்ச்சிபெற்ற 214 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணி ஆணை பெற்றவா்கள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் வளா்ச்ச்சிப் பணிகள் குறித்து ஆணையா் ஆய்வு

சேலம்: சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டலாம்பட்டி கோட்டம் எண் 47, 48, 60 ஆகிய வாா... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

சேலம்: சரியான எடையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திர... மேலும் பார்க்க

புதிய வழித்தடம், வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவை

சேலம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் மகளிா் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவையை சுற்றுலாத் துறை அ... மேலும் பார்க்க

ஏத்தாப்பூரில் காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகள் பயன்பாடு பயிற்சி

வாழப்பாடி: ஏத்தாப்பூரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகளின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 27,500 கனஅடியாக குறைவு

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 27,500 கன அடியாக குறைந்தது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை மாலை 40,500 கனஅடியில் இருந்து 27,500 கனஅடியாக குறைந்தது. நீா்வரத்து சரிந்ததால் அணை... மேலும் பார்க்க