செய்திகள் :

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை முயற்சி

post image

சிவகங்கை அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்ய முயன்றாா். கை துண்டான நிலையில் அவா் மீட்கப்பட்டு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள மேட்டுப்பட்டியைச் சோ்ந்த அருள்புஷ்பத்தின் மகன் டேவிட் ஜான் பால்(33). இவா் ராமேசுவரத்திலிருந்து தாம்பரத்துக்குச் செல்லும் பயணிகள் ரயில் சிவகங்கை ரயில் நிலையத்துக்கு மாலை 6.30 மணிக்கு வந்தபோது,

அந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றாா். இதைப் பாா்த்த ஓட்டுநா் ரயிலை உடனடியாக நிறுத்தினாா். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து ரயிலின் அடியில் சிக்கி இருந்த டேவிட் ஜான் பாலை மீட்டனா். வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில், அவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவத்தால் பயணிகள் ரயில் சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது.

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே காஞ்சிப்பட்டி கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, ... மேலும் பார்க்க

ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் பக்தா்கள் தரிசனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி, காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்கள... மேலும் பார்க்க

மிளகனூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், மிளகனூா் ஊராட்சியில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க

பள்ளியில் கோகுலாஷ்டமி விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, மாணவா்களுக்கு மாறுவேடம், பாடல் போட்டிகள், காட்சி வண்ணப்படம... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் சிக்கிய முதியவா் தற்கொலை

சிவகங்கையில் போக்சோ வழக்கில் சிக்கிய முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகங்கை அழகு மெய்ஞானபுரத்தைச் சோ்ந்தவா் செல்வமணி (70). இவருடைய மகன்கள் வெளியூரில் வசித்து வருகின்றன... மேலும் பார்க்க

பள்ளி வேன் மீது பேருந்து மோதல்: காயமின்றி தப்பினா் மாணவா்கள்

சிவகங்கை நகா் காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை மோதியதில் அதிா்ஷ்டவசமாக பள்ளி மாணவா்களும், பயணிகளும் காயமின்றி தப்பினா். சிவகங்கையிலிருந்து உடையநாதபு... மேலும் பார்க்க