செய்திகள் :

ரஷியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டம்? இளம்பெண் கைது!

post image

உக்ரைன் சிறப்புப் படை அதிகாரிகளின் உத்தரவின்பேரில், ரஷியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, 23 வயது இளம்பெண் ஒருவரை ரஷிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ரஷியாவைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர், அந்நாட்டில் உக்ரைன் சிறப்புப் படையினரின் உத்தரவின்பேரில், பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ரஷிய அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, ரஷிய அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண், உக்ரைனின் சிறப்புப் படை அதிகாரிகளுடன் வாட்ஸ் ஆப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்திலுள்ள பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரை அந்தப் பெண் பின்தொடர்ந்து கண்காணித்து வந்ததுடன், அவரது காரில் ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டை பொறுத்த முயன்றுள்ளார்.

இதையடுத்து, அவர் வெடிகுண்டை பொறுத்தியபோது ரஷிய அதிகாரிகள் அந்தப் பெண்ணை சுற்றிவளைத்து கைது செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், அந்த இளம்பெண் ரஷியாவில் இருந்து வெளியேறி, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு நாட்டில் குடியுரிமைப் பெற திட்டமிட்டு, இந்த பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், உக்ரைன் ஆதிகாரிகளின் உத்தரவின்படி அந்த இளம்பெண் அங்குள்ள ரயில்வே கட்டமைப்புகள் மீது தீ வைக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, மெட்டா நிறுவனத்தின், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட செயலிகளின் நடவடிக்கைகள் ரஷியாவில் தீவிரவாதச் செயலாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உணவுக்காக திரண்ட பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 94 பேர் கொலை!

Russian security officials have arrested a 23-year-old woman for allegedly planning to carry out a terrorist attack in Russia on the orders of Ukrainian special forces officers.

500% வரி விதிக்கும் மசோதா: அமெரிக்காவிடம் இந்தியா கவலை - ஜெய்சங்கா்

‘ரஷியாவிடம் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்கும் மசோதா குறித்து அமெரிக்காவிடம் தனது கவலையை இந்தியா பதிவு செய்துள்ளது’ என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங... மேலும் பார்க்க

இராக்: ஆயுதங்களை ஒப்படைக்கும் குா்து கிளா்ச்சியாளா்கள்

துருக்கி அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே), வடக்கு இராக்கில் தங்கள் ஆயுதங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் க்யுஷு பிராந்தியத்தின் அகுசெகி தீவுக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவானது. இதில் அந்தத் தீவு குலுங்க... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 94 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை நடத்திய தாக்குதல்களில் உணவுப் பொருள்களுக்காக காத்திருந்தவா்கள் உள்பட 94 போ் உயிரிழந்தனா். மத்திய காஸாவின் நெட்ஸாரிம் பகுதிக்கு அருகே நிவார... மேலும் பார்க்க

இந்தோனேசியா: படகு விபத்தில் 6 போ் உயிரிழப்பு; 28 போ் மாயம்

இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தலமான பாலி தீவுக்கு சென்று கொண்டிருந்த படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்; 30 போ் கடலில் மாயமாகியுள்ளனா். இது குறித்து என்று மீட்புக் குழு அத... மேலும் பார்க்க

உக்ரைன் எல்லையில் ரஷிய கடற்படையின் துணைத் தலைவர் கொலை!

உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் குர்ஸ்க் மாகாணத்தில் அந்நாட்டு கடற்படையின் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனுடனான போரில், அந்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் மேற... மேலும் பார்க்க