செய்திகள் :

ரஷியாவுக்கு 6,000 ராணுவ பொறியாளர்களை அனுப்ப வட கொரியா திட்டம்!

post image

ரஷியாவுக்கு உதவும் வகையில் 6 ஆயிரம் ராணுவ பொறியாளர்களை அனுப்ப வட கொரியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அதிபர் கிம் ஜாங் உன்னிடம் பேச்சுவார்த்தை நடத்த ரஷியாவின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்கெய் ஷோய்கு, வட கொரியாவின் பயோங்யாங் பகுதிக்கு வருகை புரிந்துள்ளார்.

வட கொரியா அனுப்பும் ராணுவ பொறியாளர்களில் 5 ஆயிரம் பேர் ரஷியாவின் குர்ஸ்க் மாகாணத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். மேலும் ஆயிரம் பேர் சாலை மற்றும் பாலங்களை சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதனிடையே மாஸ்கோவில் இருந்து ரஷியாவின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்கெய் ஷோய்கு, கடந்த இரு வாரங்களில் இரண்டாவது முறையாக அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்துப் பேசியுள்ளார்.

ஜூன் மாத தொடக்கத்தில் வட கொரியாவுக்குச் சென்று கிம் ஜாங் உன்னை சந்தித்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அவரை செர்கெய் சந்தித்துள்ளார்.

இந்த இரு சந்திப்புகளின்போதும் கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.

ரஷியா - வட கொரியா இடையே கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, தற்போது ராணுவ பொறியாளர்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக ரஷிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க | இஸ்ரேல் - ஈரான் சண்டையால் பெட்ரோல் தட்டுப்பாடு வருமா?

காஸா: உணவுக்காக காத்திருந்த 45 போ் சுட்டுக் கொலை

காஸாவின் கான் யூனிஸ் நகரில் உணவுப் பொருள்களை வாங்குவதற்காக செவ்வாய்க்கிழமை காத்திருந்த 45 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.இந்தப் படுகொ... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஈரான் மோதலை நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்

இஸ்ரேலும் ஈரானும் தங்களுக்கு இடையிலான மோதலை நிறுத்த வேண்டும் என்று ஜி7 நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. காஸா போர் நிறுத்தம் உள்பட ஈரான் பிரச்னைக்குக் காணப்படும் தீர்வானது, மத்திய கிழக்கு பிராந்தியத... மேலும் பார்க்க

மத்திய கிழக்கில் விமான நிலையங்கள் மூடல்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் மேலும் விரிவடையக் கூடும் என்ற அச்சத்தில், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஏராளமான... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றத்தை ஒருபோதும் ஏற்க முடியாது - அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக பெருமளவிலான மக்கள் வந்து குடியேறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ந... மேலும் பார்க்க

தலாய் லாமாவின் பிறந்த நாள் கருணை தினம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகம்

திபெத்திய பௌத்த மதத் தலைவரான 14-ஆவது தலாய் லாமாவின் 90-ஆவது பிறந்தநாளை (ஜூலை 6) ‘கருணை தினமாக’ அறிவிக்கக்கோரி இரு உறுப்பினா்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானத்தை திங்கள்கிழமை அறிமுகம் செய்தனா். ஆள... மேலும் பார்க்க

ஈரான் மீது தீவிர தாக்குதல்: இஸ்ரேலுக்கு 20 இஸ்லாமிய நாடுகள் கண்டனம்

ஈரான் மீது இஸ்ரேல் முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்திவருவதாக 20 அரபு, இஸ்லாமிய, ஆப்பிரிக்க நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து அந்த நாடுகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்... மேலும் பார்க்க