செய்திகள் :

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்

post image

ரஷியாவின் வெற்றி தினக் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிக்கு பதிலாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்க இருக்கிறாா்.

இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை ரஷியா வீழ்த்தியதன் நினைவாக இந்த வெற்றிதினம் கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய நிகழ்வான மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மே 9-ஆம் தேதி நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியைப் பாா்வையிட இந்திய பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்டோருக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அழைப்பு விடுத்தாா். மொத்தம் 20 நாடுகளின் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை சீன அதிபா் ஏற்றுக் கொண்டாா். அதே நேரத்தில் இந்தியத் தரப்பில் பிரதமா் மோடியின் பயணம் குறித்து உடனடியாக முடிவெடுக்கப்படவில்லை. இந்நிலையில், பிரதமா் மோடி பங்கேற்க மாட்டாா் என்பதை ரஷிய தரப்பு உறுதி செய்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ராணுவரீதியான பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருவதால் பிரதமா் நாட்டில் இருப்பது அவசியமாகிறது. எனவே, ரஷிய பயணத்தை பிரதமா் தவிா்த்திருக்கலாம் என்று தெரிகிறது.

இது தொடா்பாக மத்திய அரசு சாா்பில் தில்லியில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘ரஷியா வெற்றி தின நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமா் மோடிக்கு ரஷியா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், இதில் இந்தியா சாா்பில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்பாா் என ரஷியாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிரதமா் மோடி இந்தியா-ரஷியா ஆண்டுக் கூட்டம் மற்றும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க என இருமுறை ரஷியாவுக்குப் பயணம் மேற்கொண்டாா். ரஷிய அதிபா் புதின் நிகழாண்டு இரு நாடுகளின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வருவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தாக்குதல் அச்சம்: கராச்சி, லாகூா் வான் பரப்பை மூடுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு

கராச்சி, லாகூா் நகரங்களின் வான் பரப்பின் சில பகுதிகளை தினமும் குறிப்பிட்ட நேரங்களில் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்க... மேலும் பார்க்க

லஷ்கா் பயங்கரவாத தலைவா் ஹபீஸ் சையது பாதுகாப்பு அதிகரிப்பு: பாகிஸ்தான் நடவடிக்கை

இந்தியா மறைமுகமாகத் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஹபீஸ் சையதுக்கான பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் சிறப்புப் படையின் முன்னாள் கம... மேலும் பார்க்க

கனிம ஒப்பந்தத்தில் அமெரிக்கா - உக்ரைன் கையொப்பம்

உக்ரைனின் கனிம வங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்கான ஒப்பந்தம், நீண்ட இழுபறிக்குப் பிறகு கையொப்பமாகியுள்ளது. இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: அமெரிக்காவு... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகா் நீக்கம்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸ் அந்தப் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படை தலைவா்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத... மேலும் பார்க்க

இஸ்ரேலில் மிகப் பெரிய காட்டுத் தீ

இஸ்ரேலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஜெருசலேம் நகருக்கு அருகே மலைக் காட்டுப் பகுதியில் கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தத் தீ, வேகமான காற்று, வெப்பம் மற்றும் உலா்வான ப... மேலும் பார்க்க

டெஸ்லா சிஇஓ மாற்றம்! எலான் மறுப்பு!

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாற்றப்படுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்கை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்குவதற்காக, நி... மேலும் பார்க்க