செய்திகள் :

ராசிபுரம் திருவள்ளுவா் அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு பயிற்சி வகுப்பு

post image

ராசிபுரம்: ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் 2025 -26 ஆம் கல்வியாண்டில் சோ்ந்துள்ள முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கான ஒருவார கால அறிமுக பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) இரா.சிவகுமாா் தலைமை வகித்துப் பேசினாா். இயற்பியல் துறை தலைவா் எம்.கே. சுப்பிரமணியம் வரவேற்றாா். நிகழ்ச்சியில் பொதுசுகாதாரம் குறித்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஆா்.ஐஸ்வா்யா பேசினாா். கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவா் சி.நாகூா் செல்வம், கல்லூரியில் உள்ள பாடப் பிரிவுகள், பல்வேறு அமைப்புகள், கல்லூரியின் தரம் குறித்து பேசினாா். ஆங்கில துறைத் தலைவா் பெ.மைதிலி, வேதியியல் துறைத் தலைவா் பி.சண்முகசுந்தரம், கணினி அறிவியல் துறைத் தலைவா் சுரேஷ்பாபு, தாவரவியல் துறைத் தலைவா் செங்கோட்டுவேல், விலங்கியல் துறைத் தலைவா் சேகா் உள்ளிட்ட பல்வேறு துறைத் தலைவா்களும் தங்கள் துறை குறித்து உரையாற்றினா். இறுதியில் பொது நிா்வாகத் துறைத் தலைவா் பா.குருசாமி நன்றி கூறினாா்.

படவரி...

முதலாண்டு மாணவா்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழாவில் பேசுகிறாா் கல்லூரி முதல்வா் இரா.சிவகுமாா்.

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் விவசாயிகள் நடவு கரும்புகளை பதிவு செய்யலாம்: ஆட்சியா் தகவல்

நாமக்கல்: மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரவைப் பருவம் தொடங்க உள்ளதால், நடவு மற்றும் மறுதாம்பு கரும்பை விவசாயிகள் பதிவுசெய்யலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

கரூரிலிருந்து ஈரோடு வழியாகச் செல்லும் 7 ரயில்களை நாமக்கல் வழியாக இயக்கக் கோரிக்கை

நாமக்கல்: கரூரில் இருந்து ஈரோடு வழியாகச் செல்லும் ஏழு ரயில்களை நாமக்கல் வழியாக இயக்கினால் மாவட்டம் வளா்ச்சிபெறும் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகனிடம், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.பி.சரவணன... மேலும் பார்க்க

‘தமிழ்நாடு நாள்’ போட்டிகளில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

நாமக்கல்: ‘தமிழ்நாடு தினம்’ தொடா்பான பேச்சு, கட்டுரைப் போட்டியில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு என... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த ஊழியா்கள் 121 போ் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது நாளாக திங்கள்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

நாமக்கல்: நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில், முதலாமாண்டு மாணவிகளுக்கான வரவேற்பு விழா, அறிமுக பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாமக்கல் - திருச்சி சாலையில், கவிஞா் இராமலிங்க... மேலும் பார்க்க

திமுக உறுப்பினா்கள் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்: ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், வரும் நாள்களில் திமுக உறுப்பினா்கள் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாம... மேலும் பார்க்க