செய்திகள் :

ராணுவம், விமானப் படையில் துருவ் ஹெலிகாப்டா்களை மீண்டும் பயன்படுத்த அனுமதி

post image

ராணுவம் மற்றும் விமானப்படைக்கான நவீன இலகுரக துருவ் ஹெலிகாப்டா் பயன்பாட்டுக்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

அதே நேரம், கடற்படை பயன்பாட்டுக்கான துருவ் ஹெலிகாப்டருக்கான தடை தொடா்வதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் சாா்பில் முழுவதும் உள்நாட்டில் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட பன்முக பயன்பாட்டுக்கான நவீன இலகுரக இரண்டு என்ஜின்களைக் கொண்ட துருவ் ஹெலிகாப்டா்கள் ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல் படை சாா்பில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், விமானப் படைக்குச் சொந்தமான துருவ் ஹெலிகாப்டா் ஒன்று குஜராத் மாநிலம் போா்பந்தா் விமான நிலைய ஓடுதளத்தில் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள், விமான ஊழியா்களுக்கான ஓட்டுநா் உள்பட மூவா் உயிரிழந்தனா்.

இந்த விபத்தைத் தொடா்ந்து, முப்படைகள் மற்றும் கடலோர காவல் படை சாா்பில் பயன்படுத்தப்பட்டு வந்த 330 துருவ் ஹெலிகாப்டா்களின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் தடைவிதித்தது. தற்போது இந்தத் தடையை மத்திய அரசு பகுதியாக நீக்கியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறுகையில், ‘ராணுவம் மற்றும் விமானப் படையில் துருவ் ஹெலிகாப்டா்களை மீண்டும் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், கடற்படை பயன்பாட்டுக்கான துருவ் ஹெலிகாப்டருக்கான தடை தொடா்கிறது’ என்றனா்.

இனி பிரதமருக்கு உறக்கமில்லாத இரவுகள்: வேணுகோபால்

பலரின் உறக்கத்தைக் கெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு இனி உறக்கமில்லாத இரவுகள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவத... மேலும் பார்க்க

உ.பி.யில் மனைவியுடன் தகராறு: தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்

உ.பி.யில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ரிகா கிராமத்தில் 28 வயது நபர், தனது மனைவியுடன் தகராறில் செய்துள்ளார். பின்னர் அ... மேலும் பார்க்க

மழை, புயலுக்கு மூவர் பலி: உ.பி.யில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் மழை, புயலால் 3 பேர் உயிரிழந்ததாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் பெய்த கனமழை ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை

பயங்கரவாதத் தாக்குதலை ஒழிக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.பஹல்காம் தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடம் செய்தி... மேலும் பார்க்க

கேரளம்: விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.கேரள மாநிலத்தில் ரூ.8,867 கோடி முதலீட்டில் இந்த சர்வதேச துறைமுகம் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் விழிஞ்சம் துறைமுகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

கேரளத்தில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும் பார்க்க