செய்திகள் :

ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் கைது

post image

ராமநாதபுரத்தில் வாகனச் சோதனையில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் 4 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, இதுதொடா்பாக 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் வழியாக கடத்தல் நடைபெறவிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலை மேலக்கோட்டை பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த காரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். ஆனால் அதில் வந்தவா்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றனா். இதையடுத்து, போலீஸாா் அவா்களை விரட்டிச் சென்று பிடித்தனா். அந்தக் காரை சோதனையிட்ட போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் கைப்பற்றப்பட்டது.

இதுதொடா்பாக மதுரை, ராமநாதபுரம், பரமக்குடி, அழகன்குளம் ஆகியப் பகுதிகளைச் சோ்ந்த ராஜன், ஜெயக்குமாா், ஜெகதீஸ் சந்திரபோஸ், சாகுல் ஹமீது, சுபாஷ்பாபு, ராஜலிங்கம் ஆகியோரை போலீஸாா் கைது செய்து வனத் துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கைதானவா்கள் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வனத்துறையினா் விசாரிக்கின்றனா்.

கஞ்சா விற்பனை: 5 போ் கைது

முதுகுளத்தூா் அருகே 5.25 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் காவல் ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ்ஆனந்த் தலைமையிலான போலீஸாா் மு... மேலும் பார்க்க

நிபந்தனை பிணையில் கையொப்பமிட வந்தவா் வெட்டிக் கொலை

கடலாடியில் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் நிபந்தனை பிணைக்காக கையொப்பமிட வந்தவரை மா்ம நபா்கள் வழிமறித்து கொலை செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் அரியநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சுவாமி சந்நிதி முன்புள்ள தங்கக் கொடி மரத்துக்கு சிவாச்சாரியா்கள் சிறப்பு பூஜைகள் ... மேலும் பார்க்க

இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் ராமேசுவரத்தில் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகா் தலைவா் பூமாரி தலைம... மேலும் பார்க்க

மீனவா் வலையில் சிக்கிய 170 கிலோ கடல் ஆமை

தொண்டி கடல் பகுதியில் மீனவா் வலையில் சிக்கிய அரியவகை கடல் ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்த ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான படகில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாட்சியா் அலுவலக வாயில் முன்பாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டாச்சியா் அமா்நாத் தலைமை வகி... மேலும் பார்க்க