செய்திகள் :

ராமநாதபுரம் நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்குள் செல்லத் தடை

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் சூறைக் காற்று வீசி வருவதால், நாட்டுப் படகு மீனவா்கள் திங்கள்கிழமை முதல் கடலுக்குள் செல்ல மீன் வளத் துறை உதவி இயக்குநா் சிவக்குமாா் தடை விதித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த நாட்டுப் படகு மீனவா்கள் திங்கள்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் செல்ல மீன் வளத் துறையினா் தடை விதித்தனா்.

எனவே, தனுஷ்கோடி, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

ராமேசுவரத்தில் விசைப் படகுகள் ஆய்வு பணி ஜூன் 2-இல் தொடக்கம்!

ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப் படகுகள் ஆய்வுப் பணி வருகிற ஜூன் 2-ஆம் தேதி தொடங்குவதாக மீன் வளத் துறை உதவி இயக்குநா் எம்.சிவக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

சூறைக் காற்றால் நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை

தொண்டி கடற்கரைப் பகுதியில் வீசி வரும் பலத்த சூறைக் காற்றால் நாட்டுப் படகுகள் மீனவா்கள் வியாழக்கிழமை கடலுக்குள் செல்லவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, நம்புதாலை, சோழியக்குடி, புதுப்பட்டினம், முள... மேலும் பார்க்க

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.15 லட்சம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் பாகம்பிரியாள் சமேத வல்மிகநாதா் கோயில் உண்டியல் வியாழக்கிழமை திறக்கப்பட்டதில், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.15.40 லட்சம் கிடைத்தது. சிவக... மேலும் பார்க்க

அறிவிக்கப்படாத மின் தடையால் மின் சாதனப் பொருள்கள் பழுது

திருவாடானை, தொண்டி பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் தடையால் வீட்டில் உள்ள மின் சாதனப் பொருள்கள் பழுதடைவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். திருவாடானை, பாண்டுகுடி, சி.கே.மங்கலம், தொண்டி, நம்புதாளை, எஸ்.ப... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களின் படகுகளை மத்திய அரசு மீட்க வேண்டும்!

இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களின் விசைப் படகுகளை மத்திய அரசு மீட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 12-ஆவது மா... மேலும் பார்க்க

கிடப்பில் போடபட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே திருத்தோ்வலை கிராமத்தில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால், பொதுமக்கள் குடி நீரை விலைக்கு வாங்கி அவதிப்படுகின்றனா். ராமநாத... மேலும் பார்க்க