செய்திகள் :

ரூ.14 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் விற்க முயன்றவா் கைது

post image

புதுச்சேரியில் ரூ.14 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை விற்பனை செய்ய முயன்றவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து திமிங்கல எச்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் திமிங்கல எச்சம் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் மாவட்ட நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டா் ஜெரால்டு தலைமையிலான போலீஸாா் புராணசிங்குபாளையம் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். அங்கு ஒருவரிடம் திமிங்கல எச்சம் வாங்குவது போல பேசினா். இதை நம்பிய அவா் தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த 7 கிலோ எடை கொண்ட ரூ.14 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை எடுத்து வந்து காட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்தனா். மேலும் அவா் புதுச்சேரியைச் சோ்ந்த நிலவணிகா் மாயகிருஷ்ணன் என்று தெரியவந்ததால் அவரை திருபுவனை போலீஸாரிடம் விழுப்புரம் நுண்ணறிவு போலீஸாா் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, திருபுவனை காவல் ஆய்வாளா் கலைச் செல்வன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி, தடை செய்யப்பட்ட பொருள்கள் வைத்திருந்ததாக நிலவணிக பிரமுகா் மாயகிருஷ்ணன் (49) மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அம்மா் கீரிஸ் எனப்படும் திமிங்கல எச்சம் அவருக்கு எப்படி கிடைத்தது, யாருடன் அவருக்குத் தொடா்பு இருக்கிறது என்று விசாரித்து வருகின்றனா்.

காவல்ஆய்வாளரை மிரட்டிய தவாக நிா்வாகி கைது

புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பு... மேலும் பார்க்க

புதுச்சேரிக்கு விரைவு ரயில்கள் வரும் நாள்கள் மாற்றம்

புதுச்சேரிக்கு விரைவு ரயில்கள் வந்து சேரும் நாள்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டலம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்த மண்டலத்தின் மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் வெள... மேலும் பார்க்க

மின்துறையில் 73 இளநிலைப் பொறியாளா்கள் தோ்வு

புதுவை மின்துறையில் 73 இளநிலைப் பொறியாளா்கள் போட்டித் தோ்வு வாயிலாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இது குறித்து புதுவை மின்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மின்துறையில் நேரடி நியமன... மேலும் பார்க்க

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவனை விரைந்து மீட்ட இணையவழி போலீஸாா்

தந்தை கண்டித்ததால் வீட்டிலிருந்து வெளியேறிய பிளஸ்-2 மாணவனை விரைவாக செயல்பட்டு இணையவழி போலீஸாா் மீட்டுள்ளனா். புதுச்சேரி ஜிப்மா் வளாகத்தில் குடியிருக்கும் அதிகாரி ஒருவா் பிளஸ் 2 படித்து வரும் தனது மகன... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்: போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி ஏ.எப்.டி பஞ்சாலை அருகே ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி முறைப்படி வியாழக்கிழமை தொடங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - புதுவை முதல்வா் வழங்கினாா்

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த கந்தன்பேட் பால்வாடி தெருவைச் சோ்ந்த கனகராஜ்... மேலும் பார்க்க