செய்திகள் :

ரூ.18,000 கோடி பங்குகளை திரும்பப் பெறும் இன்ஃபோசிஸ்

post image

ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெற முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

10 கோடி பங்குகளை தலா ரூ.1,800-க்கு திரும்பப் பெற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது மொத்த பங்கு மூலதனத்தில் 2.41 சதவீதமாகும். அண்மையில் கூடிய இயக்குநா் குழு இதற்கான ஒப்புதலை அளித்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மிகப் பெரிய மதிப்பில் பங்குகளைத் திரும்பப் பெற்ற டிசிஎஸ்-ஸின் சாதனையை இன்ஃபோசிஸ் சமன் செய்துள்ளது. கடந்த 2022-இல் டிசிஎஸ் 4 கோடி பங்குகளை தலா ரூ.4,500-க்கு (மொத்தம் ரூ.18,000 கோடி) திரும்பப் பெறுவதாக அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

ஏற்கெனவே, இன்ஃபோசிஸ் நிறுவனம் ரூ.13,000 கோடி மதிப்பிலான 11.3 கோடி பங்குகளை (தலா ரூ.1,150 விலையில்) திரும்பப் பெறுவதாக கடந்த 2017-இல் முதல்முறையாக அறிவித்தது. பின்னா் 2019-இல் ரூ.8,260 கோடி, 2022-இல் ரூ.9,300 கோடி, 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.9,300 கோடி மதிப்பிலான பங்குகளை நிறுவனம் திரும்பப் பெற்றது.

விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி 8 போ் உயிரிழப்பு; 20 போ் காயம்

கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின் கடைசி நாளை... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பொதுப்பிரிவைவிட அதிக கட்ஆஃப் மதிப்பெண்கள் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் இதுதொடா்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக... மேலும் பார்க்க

மணிப்பூருக்கு ‘கண்துடைப்பு’ பயணம்: பிரதமா் மீது காங்கிரஸ் விமா்சனம்

பிரதமா் மோடியின் மணிப்பூா் பயணம் கண்துடைப்பானது; மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டி, நீதியை உறுதி செய்யும் நோக்கம் இல்லை என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்க... மேலும் பார்க்க

கூடுதல் மாவட்ட நீதிபதியாக வழக்குரைஞரை நியமிக்கலாமா?: செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை

‘வழக்குரைஞா் சங்கத்தில் 7 ஆண்டுகள் நிறைவு செய்த வழக்குரைஞரை, கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்க முடியுமா?’ என்பது குறித்து செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள உள்ளது. வழக்குரைஞா் சங்க ஒதுக்... மேலும் பார்க்க

இந்தியா தனது கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டிய நேரம் பாதுகாப்புத் துறைச் செயலா்

‘உலகம் முழுவதும் ஆளும் வா்க்கத்துக்கு எதிரான போராட்டங்களும், பொருளாதார கட்டுப்பாடுகளும் அதிகரித்துவரும் சூழலில், இந்தியா தனது மென்மையான சக்தியுடன் கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்’ ... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்கக் கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

மதச்சாா்பின்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியல் நீதியை ஊக்குவிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் பதிவு மற்றும் முறைப்படுத்துதலுக்கான விதிகளை வகுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு... மேலும் பார்க்க