செய்திகள் :

ரூ. 20 ஆயிரத்தில் அதிக பேட்டரியுடன் ஸ்மார்ட்போன்! ரியல்மி 15டி அறிமுகம்!

post image

ரியல்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 15 டி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

ரூ. 20 ஆயிரம் விலையில் 7000mAh பேட்டரி திறனுடன் 50MP கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள நடுத்தர வர்க்கப் பயனர்களைக் கவரும் வகையில் நிறைவான அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் குறித்த சிறப்பம்சங்களைக் காணலாம்.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

ரியல்மி 15டி ஸ்மார்ட்போனில் மூன்று வகையான வேரியன்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

8GB+128GB நினைவகத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் விலை ரூ. 20,999

8GB+256GB, நினைவகத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் விலை ரூ. 22,999

12GB+256GB நினைவகத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் விலை ரூ. 24,999

இந்த மூன்றுக்கும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. சலுகையின்படி, 8GB+128GB ஸ்மார்ட்போன் விலை ரூ. 18,999, 8GB+256GB ஸ்மார்ட்போன் விலை ரூ. 20,999 மற்றும் 12GB+256GB ஸ்மார்ட்போன் விலை ரூ. 22,999.

மீடியாடெக் டைமன்சிட்டி 6400 மேக்ஸ் 5 ஜி புராசஸர் கொண்டது.

6.57 அங்குல அமோலிட் திரை உடையது. திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 4000 nits திறன் கொண்டது. 2,160Hz திறன் வரை திரையின் வெளிச்சத்தை குறைத்துக்கொள்லலாம்.

50MP முதன்மை கேமராவும் 4K விடியோ பதிவு திறனையும் கொண்டது. முன்பக்கமும் 50MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

7000mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. அதிவேக சார்ஜரும் உடன் வழங்கப்படுகிறது. இதன்மூலம், 25.3 மணிநேரம் யூடியூப் பார்க்கலாம். 128 மணிநேரம் பாடல்கள் கேட்கலாம். 13 மணிநேரம் கேம் விளையாடலாம் என ரியல்மி தெரிவிக்கிறது.

7.79மி.மீ தடிமனும், 181 கிராம் எடையும் கொண்டது.

நீலம், டைட்டானியம், சில்வர் வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன.

நீர் மற்றும் தூசி புகா தன்மையுடன் IP69 திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | 5ஜி சந்தையை ஆக்கிரமித்துள்ள நிறுவனம் எது தெரியுமா?

Realme 15T Launched in India with 50MP Camera and 7000mAh Battery

பிகாா்: வாக்குரிமை பயணத்தில் இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய பைக் பரிசளித்த ராகுல்

பிகாரில் எதிா்க்கட்சிகள் சாா்பில் நடத்தப்பட்ட வாக்குரிமைப் பயணத்தின்போது இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய மோட்டாா் சைக்கிளை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரிசளித்துள்ளாா். பாஜக ‘வா... மேலும் பார்க்க

நிலநடுக்கம் பாதித்த ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 21 டன் நிவாரண உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்காக, இந்தியா செவ்வாய்க்கிழமை 21 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பய... மேலும் பார்க்க

நேபாளம், பூடான் நாட்டு மக்களுக்கு இந்தியாவில் பாஸ்போா்ட், விசா அவசியமில்லை

நேபாளம், பூடான் நாட்டு மக்கள் மற்றும் இந்த இரு நாடுகளில் உள்ள இந்தியா்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் நுழைவு இசைவு (விசா) அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமலுக்கு வந்துள்ள 20... மேலும் பார்க்க

இமயமலையில் 400 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன: மத்திய நீா் ஆணையம் கவலை

இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாகவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது. பனிப்பாறை ஏரிகள், ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா இடையேயான பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் நம்பிக்கை

இந்திய பொருள்கள் மீது மிக அதிக வரி விதிப்பு காரணமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும்’ என்று அந்த நாட்டின் நி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் தொடா்புடைய போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது

ஜம்மு-காஷ்மீரின் சா்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள்களை கடத்தி வந்த 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ஹிராநகா் செக்டாரில் உள்ள சான் தண்டா கிராமத்தில் சா்வதேச எல்லையொட்... மேலும் பார்க்க