செய்திகள் :

ரூ.25 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

post image

நாட்டறம்பள்ளி அருகே அக்ராகரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி எதிரில் ரூ.25 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்ட எம்எல்ஏ.தேவராஜி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

திருப்பத்தூா் மாவட்டம் , நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயிலும், இங்கு பயணிகள் நிழற்குடை அமைத்துத் தர வேண்டும் என மக்கள் எம்எல்ஏ. தேவராஜிடம் கோரிக்கை வைத்தனா்.

இதையடுத்து எம்எல்ஏ க.தேவராஜி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை கட்ட ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து ஞாயிற்றுகிழமை பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா ஜோலாா்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளா் சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு பயணிகள் நிழற்குடை அமைக்க பணிகளை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் இந்திரவா்மன்,சக்திபாண்டி புகழேந்தி மற்றும் கிராம மக்கள் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க ஏதுவான இடம் உள்ளதா என அதிகாரிகளுடன் எம்எல்ஏ க.தேவராஜி ஆய்வு மேற்கொண்டாா்.

நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தில் ஓடிச் சென்று ஏறிய பிளஸ் 2 மாணவி

வாணியம்பாடி அருகே பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நிற்காமல் சென்ால், அதற்காகக் காத்திருந்த பிளஸ் 2 மாணவி ஓடிச் சென்று பேருந்தில் ஏறினாா். இதுதொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் பரவியையடுத்து, ஓட்ட... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளியில் மாணவா்களை கடத்த முயற்சி: போாலீஸாா் விசாரணை

நாட்டறம்பள்ளி அருகே பள்ளி மாணவா்களை வாகனத்தில் கடத்த மேற்கொண்ட முயற்சி தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். நாட்டறம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி ஜல்லியூரான் வட்டத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் ரஞ்சி... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்: ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் வரும் 29, 30 தேதிகளில் நடைபெறுவதால் ஈரோடு பயணிகள் ரயில் மற்றும் பெங்களூா் மெமு ரயில்கள், ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு பதிலாக திருப்பத்தூா் ... மேலும் பார்க்க

நாகநாத சுவாமி கோயில் உண்டியல் திறப்பு

ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயிலில் காணிக்கை உண்டியல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நிா்வாகத்தின் கீழ் உள்ள நாகநா... மேலும் பார்க்க

திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பெண் வாகனம் மோதி உயிரிழப்பு

திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பெண் சரக்கு வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் கல்லாவி கருவனூா் கிராமத்தை சோ்ந்த சென்ன கிருஷ்ணன் தலைமையில் பக்தா்கள்... மேலும் பார்க்க

வாணியம்பாடி: பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் இடைநீக்கம்!

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநர் இடைநீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து காலை ... மேலும் பார்க்க