செய்திகள் :

`லாக்கப் டெத், கீழடி அறிக்கை, மகளிர் இடஒதுக்கீடு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எழுப்பும் விவகாரங்கள்

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) முதல் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 21 வரை ஒரு மாத காலம் நடைபெறவிருக்கிறது.

இதனை முன்னிட்டு, நேற்று நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை இக்கூட்டத்தொடரில் தங்கள் தரப்பிலிருந்து எந்தெந்த பிரச்னைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படும் என்பது குறித்து பேசியிருக்கிறார்.

தனியார் ஊடகத்திடம் இது குறித்து பேசிய தம்பிதுரை, "தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கொல்கிறது.

இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகள் எதுவாக இருந்தாலும், அவை சரியான நேரத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே இதில் கவனம் செலுத்துவது முக்கியம்.

தம்பிதுரை

நாடு முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தல் மிக அதிகமாக உள்ளது. மாநில அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறிவிட்டது.

தமிழகத்தில் காவல்துறை லாக்கப் மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிகளை நடத்திய தொல்பொருள் துறையின் அறிக்கையை மத்திய அரசு வெளியிடக் கோரியிருக்கிறோம்.

அரசாங்கம் அதை வெளியிட வேண்டும். மேலும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த வேண்டும்." என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

”திமுக-வுக்கு 8 மாதம்தான் ஆயுள்; இப்போதாவது நீட் ரத்து ரகசியத்தை சொல்லலாமே!”- எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூரில், மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாபநாசம், தஞ்சாவூர், திருவையாறு ஆகிய தொகுதிகளில் பேசினார். தஞ்சாவூரில் மாநகராட்... மேலும் பார்க்க

Jagdeep Dhankar ராஜினாமா: பகீர் பின்னணி! | OTP சர்ச்சை: சிக்கலில் DMK | Imperfect Show 22.7.2025

* Jagdeep Dhankar: குடியரசு துணை தலைவர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கர் ராஜினாமா! - காரணம் என்ன? * “ராஜினாமா முடிவை தன்கர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” -ஜெய்ராம் ரமேஷ்* நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?* உச... மேலும் பார்க்க

புதுச்சேரி: அரசுப் பணிகளில் கொல்லைப்புற பணி நியமனங்கள்! - சர்ச்சை வளையத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத புதுச்சேரி அரசுபுதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2011 காலகட்டத்தில் அப்போதைய முதல்வர் ரங்கசாமியால், பல்நோக்கு ஊழியர்கள், தொழில்நு... மேலும் பார்க்க

"இதைக் கூறுபவர்கள் முதலில்..." - சொந்தக் கட்சித் தலைவர் பேச்சுக்கு சசி தரூர் எதிர்வினை!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக `ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதிலிருந்து நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் மோடி மற... மேலும் பார்க்க