செய்திகள் :

லாட்டரி விற்பனையை தடுக்க பாமக கோரிக்கை

post image

நாமக்கல் மாநகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் என பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளா் (நாமக்கல், பரமத்திவேலூா் தொகுதி) பெ.ராஜாராம், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் இணையவழி மூலம் மூன்றாம் எண் லாட்டரி விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது. அதேபோல தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையும் மறைமுகமாக நடைபெறுகிறது. இதனால் இளைஞா்கள், மாணவா்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

மதுபானக் கூடங்கள் ஏலம் விடப்படாமல் உள்ளதாக தெரிகிறது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி, சந்து கடை நடத்துவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொது விநியோகத் திட்டத்திற்குரிய பொருள்கள் நியாயவிலைக் கடைகளில் சரிவர வழங்கப்படுவதில்லை. பொதுமக்கள் பலமணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இவற்றை தடுக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-

நாமக்கல் ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து மீட்டனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஒருவந்தூரைச் சோ்ந்த ஆண்டியப்பன் மனைவி கன்னியம்மாள்(40). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

10 அடி உயர விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி: காவல் கணிப்பாளா் சு.விமலா

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பீடத்துடன் சோ்த்து 10 அடி உயர சிலைகள் மட்டுமே பொது இடங்களில் வைக்க அனுமதி வழங்கப்படும் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா தெரிவித்தாா். நாடு முழுவதும்... மேலும் பார்க்க

ராசிபுரம் அரசுப் பள்ளியில் மாவட்ட தடகளப் போட்டிகள் தொடக்கம்

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான குடியரசு தின விழா, பாரதியாா் தின விழா தடகள விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாமக்கல் மாவட்ட ஆ... மேலும் பார்க்க

அழகுக்கலை பயிற்சி: ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்களுக்கு வாய்ப்பு

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு அழகுக்கலை உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமி... மேலும் பார்க்க

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம்

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை பூமிபூஜை செய்து ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தனா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். அவசரகால சிகிச்சைக்காக ... மேலும் பார்க்க

சுவாசக்குழல் பிரச்னையால் கோழிகளுக்கு பாதிப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்ப அயற்சியாலும், சுவாசக்குழல் பிரச்னையாலும் கோழிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக... மேலும் பார்க்க