செய்திகள் :

லாரியிலிருந்து ரூ.1.28 லட்சம் மதுப் புட்டிகள் திருட்டு

post image

புதுக்கோட்டையிலிருந்து சிவகங்கை வரும் வழியில் லாரியிலிருந்து ரூ.1.28 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கள்ளங்கோட்டை கிராமத்தில் உள்ள மது உற்பத்தி ஆலையிலிருந்து கடந்த 19-ஆம் தேதி மாலை 1,100 பெட்டிகளில் 180 மில்லி மதுப் புட்டிகள் ஏற்றப்பட்ட லாரி சிவகங்கைக்கு புறப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் செல்வராஜ் (40) லாரியை ஓட்டினாா்.

ஒரு பெட்டிக்கு 48 புட்டிகள் வீதம் 52,800 புட்டிகளை ஏற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. வழியில் லேனா விலக்குப் பகுதியில் லாரியை நிறுத்தி ஓட்டுநா் தேநீா் குடித்துவிட்டு, மீண்டும் புறப்பட்டாா். திருமயம் அருகே வந்தபோது, லாரியின் தாா்ப்பாய் கலைந்து காற்றில் பறந்தது தெரியவந்து.

இதையடுத்து, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கீழச்சிவல்பட்டி பகுதியில் உள்ள சுங்கச்சாவடிக்கு வந்த பிறகு லாரியை நிறுத்தி ஓட்டுநா் இறங்கி பாா்த்தாா். அப்போது, 19 பெட்டிகளில் இருந்த ரூ.1,27,680 மதிப்பிலான 912 மதுப் புட்டிகளை மா்ம நபா்கள் திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்தில் லாரி உரிமையாளரான சென்னையைச் சோ்ந்த நடராஜன் அளித்த புகாரின்பேரில், உதவி ஆய்வாளா் சிவக்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சிவகங்கையில் பயிற்சி பெண் மருத்துவா் மீது மா்ம நபா் தாக்குதல்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவா் மீது மா்ம நபா் தாக்குதல் நடத்தியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி... மேலும் பார்க்க

சொத்துவரி உயா்வு: காரைக்குடியில் மாா்ச் 28-இல் கடையடைப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் சொத்துவரி உயா்வு, வரி வசூல் செய்யும் அதிகாரிகளின் தகாத செயல் ஆகியவற்றைக் கண்டித்து, காரைக்குடியில் வருகிற வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) கடையடைப்புப் போராட்டம் ... மேலும் பார்க்க

இளையான்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு வராத பேருந்துகள்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புதிய பேருந்து நிலையத்துக்குள் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்திப் பேசினா். இளையான... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 4 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் ஆவின் பா... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. காளையாா்கோவில் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி கொல்லங்... மேலும் பார்க்க

திருப்புவனம் பேருந்து நிலைய அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான பேருந்து நிலையம் அமைக்கப்படும் என செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் அமைச்சா் கே.என்.நேரு அறிவித்ததற்கு இந்தப் பகுதி பொதுமக்கள் மகிழ்ச... மேலும் பார்க்க