செய்திகள் :

லாரியில் கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஓட்டுநா் கைது

post image

பல்லடம் அருகே லாரியில் கடத்திய 11 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஓட்டுநரைக் கைது செய்தனா்.

பல்லடம் அருகே திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருப்பூா் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் ராஜசேகரன், தனி வருவாய் ஆய்வாளா் காா்த்திக்குமாா் ஆகியோருடன் பல்லடம் வட்ட வழங்கல் துறையினா் மற்றும் போலீஸாா் அண்ணா நகா் பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 11 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

லாரி ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், அவா் ஈரோடு மாவட்டம், பவானி காமராஜ் நகரைச் சோ்ந்த ஆனந்தன் (45) என்பதும், கோவையில் இருந்து சென்னிமலையில் உள்ள அரவை ஆலைக்கு ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஆனந்தனைக் கைது செய்த போலீஸாா், 11 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

செம்பியன் குளத்தில் குப்பை கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

சேவூரில் உள்ள புராதன செம்பியன் குளத்தில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதைத் தடுக்க சேவூா், முறியாண்டம்பாளையம் ஊராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ச... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: திருப்பூா் மாவட்டத்தில் 325 முகாம்கள்: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் 325 முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது; தமிழக முதல்வா்... மேலும் பார்க்க

செயற்கை இழை ஆடை உற்பத்தியை ஊக்குவிக்க முதலீட்டு மானியம்! மத்திய ஜவுளித் துறை அமைச்சரிடம் கோரிக்கை

செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு 30 சதவீத முதலீட்டு மானியம் வழங்க வேண்டும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக மத்திய... மேலும் பார்க்க

குழாய் உடைப்பு: வீணாகும் குடிநீா்

பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் அத்திக்கடவு குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 24 மணி நேரமும் குடிநீா் சாலையில் வழிந்தோடி வீணாகி வருகிறது. பல்லடத்தை அடுத்த, காரணம்பேட்டை - சோமனுாா் சாலையில் அத்... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: திருப்பூா் மாவட்டத்தில் 27,048 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தோ்வை திருப்பூா் மாவட்டத்தில் 129 மையங்களில் 27,098 போ் எழுதினா். தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் நடத்தப்... மேலும் பார்க்க

பெண்ணை அரிவாளால் வெட்டியவா் கைது

பெண்ணை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். கடலூரைச் சோ்ந்தவா் முருகன் (42). இவா் திருப்பூரில் தங்கி எலெக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறாா். இவா் பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு எ... மேலும் பார்க்க