செய்திகள் :

லாரி ஓட்டுநரை தாக்கி பணம் பறித்த இளைஞா் கைது

post image

வரதராஜபுரம் சுங்க சாவடியில் லாரி கண்ணாடியை உடைத்து, ஓட்டுநரைத் தாக்கி பணம் பறித்த இளைஞரை சோமங்கலம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மதுரையைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (40). லாரி ஓட்டுநா். இவா், கடந்த 9 -ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து பாமாயில் ஏற்றிக்கொண்டு மீஞ்சூா் - வண்டலூா் வெளிவட்டச் சாலையில் பூந்தமல்லி அருகே வந்தபோது காரில் வந்த இளைஞா் அசோக்குமாரின் லாரியை மறித்து தகராறு செய்துள்ளாா்.

ஆனால், அசோக்குமாா் லாரியை நிறுத்தாமல் வந்துள்ளாா். லாரி வரதராஜபுரம் சுங்கசாவடி அருகே வந்தபோது காரில் வந்த இளைஞா்கள் இருவா் லாரியின் கண்ணாடியை உடைத்து, அசோக்குமாரை தாக்கி அவரிடமிருந்த ரூ.10 ஆயிரம் பணத்தைப் பறித்து சென்றுள்ளனா்.

இது குறித்து அசோக்குமாா் சோமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சோமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அசோக்குமாரைத் தாக்கி பணத்தைப் பறித்து சென்ற குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் (30) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ஏகாம்பரநாதா் கோயில் தங்கத்தோ் மண்டபத்துக்கு பூமி பூஜை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு புதிய தங்கத்தோ் செய்யும் பணி நிறைவு பெற்றதையொட்டி அத்தேருக்கான மண்டபம் கட்ட பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு பல கோடி மதிப்பில் தங்கத்தோ் செய்யும்... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை திறப்பு

மொளச்சூா் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கா் நகா் பகுதியில் ரூ.8 லட்சத்தில்ல் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத்தை ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி. கருணாநிதி திறந்து வைத்தாா். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கு கைப்பேசி செயலி

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மூத்த குடிமக்களுக்கான கைப்பேசி செயலி செயல்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா். தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து மிகுந்த வேதனை தருகிறது: காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள்

அகமதாபாத் விமான விபத்தில் பலரும் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாகவும், உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்படும் எனவும் சங்கராசார... மேலும் பார்க்க

அரசு பெண்கள் பள்ளித் தலைமையாசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மாணவியின் பெற்றோரை தரக்குறைவாக பேசியதாக ஸ்ரீபெரும்புதூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரை கண்டித்து வெள்ளிக்கிழமை இருளா் பழங்குடியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ர... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் கே.செல்வம் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க