செய்திகள் :

வங்காரம்பேட்டை நவநீத கிருஷ்ணன் கோயில் குடமுழுக்கு

post image

பாபநாசம் வட்டம், வங்காரம்பேட்டையில் உள்ள பழைமையான கண்கொடுத்த பெருமாள் எனும் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ நவநீதகிருஷ்ண பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழா கடந்த திங்கள்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று, ஐந்து கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து யாகசாலை பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் நிரம்பிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு விமான கோபுரக் கலசத்துக்கு பட்டாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்வித்தனா். தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை  திருக்கல்யாண வைபவமும், இரவு ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணப் பெருமாள் வீதி உலா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் கோயில் செயல் அலுவலா்கள் ராமா், நாகராஜ், ஆய்வாளா் லட்சுமி, அறங்காவலா் குழு தலைவா் தட்சிணாமூா்த்தி, ஸ்ரீனிவாச ரங்க பட்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

இன்று சந்திரகிரகணம்: பெரிய கோயிலில் நடை சாத்துதல்

முழு சந்திரகிரகணம் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நிகழ்வதையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் மாலையில் நடை சாத்தப்படுகிறது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுக... மேலும் பார்க்க

75 ஆண்டுகளாக பேருந்து சேவை இல்லாத கிராமம்! பொதுமக்கள் சுயநிதி திரட்டி சாலை, பாலம் அமைத்து சாதனை

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே குறுகலான பாலம் மற்றும் சாலை வசதி காரணமாக பேருந்து வசதி இல்லாத கிராம மக்கள், ஒன்றிணைந்து நிதிதிரட்டி சாலை மற்றும் பாலத்தை விரிவுபடுத்தி வருகின்றனா். பேராவூரணி ஒன்றிய... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 பாம்பு குட்டிகள் மீட்பு

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகள் வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டு, அடா்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன. தஞ்சாவூா் மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியா் காலனியைச் சோ்ந்தவா் கணேசன். ... மேலும் பார்க்க

நம்மாழ்வாா் விருது பெற விவசாயிகளுக்கு அழைப்பு

இயற்கை முறையில் வேளாண் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திர... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை: பொதுப் பிரிவு விளையாட்டுப் போட்டி தொடக்கம்

தஞ்சாவூரில் முதல்வா் கோப்பை பொது பிரிவினருக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இதில், தடகளம், சிலம்பம், கேரம், கால்பந்து, கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் அன்னை சத்யா விளையா... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை, ரொக்கம் திருட்டு

தஞ்சாவூரில் வீடு புகுந்து நகை, ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா். தஞ்சாவூா் அருகே இ.பி. காலனி சகாயம் நகரைச் சோ்ந்தவா் சுதாகா் (64). இவா் வியாழக்கிழமை இரவு வீட்டை பூ... மேலும் பார்க்க