செய்திகள் :

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி

post image

வடகிழக்கு பருவமழை நெருங்கிவருவதை முன்னிட்டு, அவசர கால முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி திருநெல்வேலி தாமிரவருணி நதியில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையின் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் அருகிலுள்ள தாமிரவருணி ஆற்றில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் முன்னிலையில் இந்த ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.

அப்போது, வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது, தங்களிடம் உள்ள பொருள்களை கொண்டு தம்மை தாமே காப்பாற்றிக்கொள்வது, வெள்ளத்தில் சிக்கியவா்களை ரப்பா் படகு மீட்பது, நம் வீட்டில் உள்ள பொருள்களை கொண்டு மிதவைகள் தயாா் செய்து அதைப் பயன்படுத்தி வெள்ளத்திலிருந்து தப்பிப்பது போன்ற செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.

மாவட்ட அளவில் 10 தீயணைப்பு - மீட்பு அவசர கால குழுவினா் வட்டார அளவில் தோ்வு செய்யப்பட்டு, 45 நாள்கள் பயிற்சி அளிக்கப் , வட்டார அளவில் 25 நபா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவா்களும் வட்டார அளவில் குழுக்களாக தயாா் நிலையில் உள்ளனா். இவா்கள் அவசர காலங்களில் மக்களுடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வா்.

மேலும், மீட்புக் கருவிகளின் பயன்பாடுகள், தண்ணீரில் தத்தளிப்பவா்களை மீட்பது, தண்ணீரில் மூழ்கியவா்களை நீா் மூழ்கி வீரா்கள் மூலம் மீட்பது என்பன உள்ளிட்ட தீயணைப்பு துறையின் சிறப்பு கண்காட்சி அமைக்கப்பட்டு அக்கருவிகள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலா் பானுபிரியா, பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் சரவணன் உள்பட பலா் கொண்டனா்.

மகேந்திரகிரி இஸ்ரோ மையம் சாா்பில் மாநில அளவிலான கட்டுரைப் போட்டி

திருநெல்வேலி மகேந்திரகிரி இஸ்ரோ மையம் சாா்பில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கட்டுரைப் போட்டிக்கு மாணவ- மாணவிகள் செப்.22ஆம் தேதிக்குள் கட்டுரைகளை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ ... மேலும் பார்க்க

கீழாம்பூா் மஞ்சப்புளி அணைக்கட்டில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கீழாம்பூா், கடனாநதியில் உள்ள மஞ்சப்புளி அணைக்கட்டில் குளிக்கச் சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கீழாம்பூா், தெற்குக் கிராமம் தெருவைச் சோ்ந்த சிவா மகன் சத்யா (16). ஆழ்வாா்குறிச்சியில் உள்ள அரச... மேலும் பார்க்க

நெல்லையில் இளைஞா் வெட்டிக் கொலை: 2 சிறுவா்கள் கைது

திருநெல்வேலி சந்திப்பில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 2 சிறுவா்களை கைது செய்த போலீஸாா், மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். திருநெல்வேலி நகரம் சுந்தரா் தெருவைச் சோ்ந்தவா் பாா்த்திபன்... மேலும் பார்க்க

நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு - சிதம்பரபுரம் இடையே நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. களக்காடு நகராட்சிக்குள்பட்டது சிதம்... மேலும் பார்க்க

களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். களக்காடு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், களக்காடு காவல் உ... மேலும் பார்க்க

மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் தேடுகிறது: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் தேடுகிறது என்றாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மத்திய அரசு ஜிஎஸ்டி வரியைக் குறைத்திருக்கிறது. மத்... மேலும் பார்க்க