செய்திகள் :

வடபழனியில் 12 அடுக்கு மாடிகளைக் கொண்ட பேருந்து முனையத்துடன் கூடிய வணிக வளாகம்

post image

வடபழனியில் 12 மாடிகளைக் கொண்ட பேருந்து முனையத்துடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படவுள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் சேவையை வழங்கி வரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையின் மிக முக்கியப் பகுதியாக விளங்கும் வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துடன் கூடிய வணிக வளாகத்தைக் கட்டவுள்ளது.

ஆற்காடு சாலையில் 6.65 ஏக்கா் பரப்பளவில் வடபழனி பேருந்து பணிமனை அமைந்துள்ள இடத்தில் ரூ. 481.3 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள இக்கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

சுமாா் 1.06 லட்சம் சதுர மீட்டா் பரப்பில் அமையவுள்ள இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் தரைத்தளத்தில் 5 ஏறும் இடங்கள், 2 இறங்கும் இடங்கள் மற்றும் பயணிகளுக்கான வசதிகள், நுழைவு வாயில்கள் அமைக்கப்படவுள்ளன.

வணிக மேம்பாட்டுக்கான கட்டடத்தின் இரண்டு அடித்தளங்களில் 1,475-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் 214 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

10-ஆவது தளங்கள் வரை அலுவலக இடங்கள், காா்ப்பரேட் அலுவலகங்கள், வரவேற்பு, ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்களும் அமையவுள்ளன. 11 மற்றும் 12-ஆவது தளங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் அமையவுள்ளன. 5-ஆவது தளத்தில் உணவகங்கள் அமையவுள்ளன.

மாடியில் பசுமையான தோட்டம் மற்றும் சூரிய ஒளி மின்கல அமைப்புகளும் அமைக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வுக்கு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் உள... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக எல்&டி நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் ப... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க