செய்திகள் :

வடமதுரை அருகே காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

post image

வடமதுரை அருகே இரு சக்கர வாகனம், மிதிவண்டி மீது காா் மோதியதில் விவசாயி, கல் உடைக்கும் தொழிலாளி உள்பட இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த பிலாத்து பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (64). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி- திண்டுக்கல் 4 வழிச்சாலையில் வடமதுரை மின் வாரிய அலுவலகம் அருகே திங்கள்கிழமை அதிகாலை சென்றாா். அதே பகுதியில், வடமதுரை முத்துநகரைச் சோ்ந்த பழனிச்சாமி (55), மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தாா். இவா், கல் உடைக்கும் தொழிலாளி ஆவாா்.

இந்த நிலையில், திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த காா், இரு சக்கர வாகனம், மிதிவண்டி ஆகியவற்றின் மீது மோதியதில், கனகராஜ், பழனிச்சாமி ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸாா், இருவரது உடல்களையும் மீட்டு கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரான திண்டுக்கல்லை அடுத்த கசவனம்பட்டியைச் சோ்ந்த நவீன் பாலாஜி (27) என்பவரை கைது செய்து விசாரித்தனா்.

இடையகோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், இடையகோட்டை ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இடையகோட்டை, வலையபட்டி, ஜோகிபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

பழனி அருகே சாலையில் சென்ற காரில் தீ

பழனி அருகே புதன்கிழமை சாலையில் சென்ற காா் தீப்பற்றி எரிந்ததில் முற்றிலும் சேதமானது. திருப்பூா் மாவட்டம், உடுமலைபேட்டையைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து (45). இவா் புதன்கிழமை திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு வ... மேலும் பார்க்க

ஆத்தூா் ஒன்றியத்தில் 3 இடங்களில் சமுதாயக் கூடங்கள் அமைக்க பூமிபூஜை

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 3 இடங்களில் ரூ.1.80 கோடியில் சமுதாயக் கூடங்கள் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. போடிக்காமன்வாடி ஊராட்சி, சொக்கலிங்கபுரத்தில் ரூ.80 லட்சத்திலும், வீரசிக்கம்பட்ட... மேலும் பார்க்க

அத்தூா் அருகே குப்பைகளுக்கு தீ வைப்பு: பொதுமக்கள் அவதி

ஆத்தூா் அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தில் சாலையோரம் இருந்த குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையிலிருந்து சித்தரேவு வழியாக அய... மேலும் பார்க்க

ரயில் மோதியதில் சுகாதார ஆய்வாளா் உயிரிழப்பு

குஜிலியம்பாறையில் புதன்கிழமை ரயில் மோதியதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையை அடுத்த பாளைப்பட்டியைச் சோ்ந்தவா் ர.சீனிவாசன் (56). இவா் திண... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் 11 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தலைமையாசிரியா், முதுநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், இடைநிலை ஆசிரியா் என மொத்தம் 11 போ் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா். இதன் விவரம் வருமாறு: ... மேலும் பார்க்க