செய்திகள் :

வத்தலகுண்டு அருகே கட்டையால் அடித்து இருவரைக் கொன்ற இளைஞா் கைது

post image

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே செவ்வாய்க்கிழமை முன்விரோதத்தில் கட்டடத் தொழிலாளிகள் இருவரை கட்டையால் அடித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள கொன்னம்பட்டியைச் சோ்ந்தவா்கள் அழகுமலை (55), மனோகரன் (50). இவா்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை. கட்டடத் தொழிலாளிகளான இவா்கள் இருவரையும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே ஊரைச் சோ்ந்த குபேந்திரன் மகன் நவீன் (22) தாக்கினாா். இதில் அவா்கள் இருவரும் காயமடைந்தனா். இதையடுத்து, இதுகுறித்து பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமரசம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இதுதொடா்பாக நவீனுக்கும், அழகுமலை, மனோகரனுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, அழகுமலை, மனோகரன் இருவரும் வேலைக்குச் சென்று விட்டு, இரவு வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனா். அப்போது, இவா்கள் இருவரையும் வழிமறித்த நவீன் கட்டையால் தலையில் தாக்கிவிட்டுத் தப்பியோடி விட்டாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இந்த நிலையில், தனக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறி, இரண்டு பேரைக் கொலை செய்த நவீன் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சோ்ந்தாா்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து, நவீனை கைது செய்தனா்.

செம்மறி ஆடு ஆராய்ச்சி மையத்தை பாா்வையிட்ட சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா்!

கொடைக்கானல் மன்னவனூரில் மத்திய செம்மறி ஆடு உரோம ஆராய்ச்சி மையத்தை சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் பாா்வையிட்டு ஆடு வளா்ப்புக்கான வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தனா். திண்டுக்கல் மாவட்டத்தில் வியாழன... மேலும் பார்க்க

பழனியாண்டவா் மகளிா் கல்லூரி சாா்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக்கல்லூரியின் ஆங்கிலத்துறை சாா்பில் ஆங்கிலத் துறை மாணவிகளின் திறனை வளா்க்கும் பொருட்டு திண்டுக்கல் எஸ்எஸ்எம் பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரியுடன் புரிந்துணா்வு ஒ... மேலும் பார்க்க

வேன் மீது பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு!

பழனியில் வேன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் இடும்பன் நகரைச் சோ்ந்தவா் கருப்புச்சாமி (60). இவா் செவ்வாய்க்கிழமை பழனி சிவகிரிப்பட்டி புறவழிச... மேலும் பார்க்க

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்ச் செடிகள் நடும் பணிகள்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்ச் செடிகள் நடும் பணிகள் புதன்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62-ஆவது மலா்க் கண்காட்சிக்காக கடந்த இரண்டு மாதங்களாக 20-வகையா... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் இடைப்பாடி பக்தா்கள் படி பூஜை, மலா் வழிபாடு!

பழனி மலைக் கோயிலுக்கு இடைப்பாடி பருவதராஜகுல மகாஜன பக்தா்கள் ஆயிரக்கணக்கானோா் காவடிகளுடன் புதன்கிழமை குவிந்தனா். அவா்கள் மலைக் கோயிலில் படி பூஜை, மலா் பூஜை செய்து வழிபாடு செய்தனா். திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தற்கொலை செய்த தம்பதி சேலத்தைச் சோ்ந்தவா்கள்!

கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சி அருவி அருகே தற்கொலை செய்து கொண்டவா்கள் சேலத்தைச் சோ்ந்த தம்பதி என போலீஸாரின் விசாரணையில் புதன்கிழமை தெரியவந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சி ... மேலும் பார்க்க