செய்திகள் :

வனத்தில் தென்பட்ட அரிய பொக்கிஷம், உற்சாகத்தில் ஆய்வாளர்கள்! பின்னணி இதுதான்

post image

அரியவகை உயிரினங்களின் கடைசிப் புகலிடமாக விளங்கி வரும் முதுமலை, பந்திப்பூர், மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை உள்ளடக்கிய வனத்தில் `Striped hyena' எனப்படும் வரிக்கழுதைப்புலிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கில் மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவற்றைக் காண்பது மிகவும் அரிதான ஒன்றாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் தான் பல ஆண்டுகள் கழித்து பந்திப்பூர் வனப்பகுதியில் தற்போது வரிக்கழுதைப்புலியின் நடமாட்டம் தென்பட்டிருக்கிறது. இயற்கையின் தூய்மை காவலனாக இருந்து காட்டைப் பாதுகாக்கும் அரிய பொக்கிஷமான வரிக்கழுதைப்புலி தென்பட்டிருப்பது ஆய்வாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இது குறித்து வனவிலங்கு பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள்‌ கூறுகையில், " உலகில் வேகமாக அழிந்து வரும் வனவிலங்குகளின் பட்டியலில் வரிக்கழுதைப்புலி இனமும் இடம் பெற்று இருப்பது வேதனையான உண்மை. காட்டில் வாழும் வனவிலங்குகளையும்‌ நம்மையும் கொள்ளை நோய்களிலிருந்து பாதுகாக்கும் மிகப்பெரிய தூய்மைப் பணியை வரிக்கழுதைப்புலிகள் செய்து வருகின்றன. விஷம் கலக்கப்பட்ட இறைச்சி, கால்நடைகளுக்கு மருந்தாக வழங்கப்பட்ட வலி நிவாரணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளன.

வரிக்கழுதைப்புலி

முதுமலையில் இவற்றின் எண்ணிக்கை சுமார் 30 வரை மட்டுமே இருக்கக்கூடும். சத்தியமங்கலம், முதுமலை, பந்திப்பூர் ஆகிய காடுகளில் வனத்துறையால் வைக்கப்பட்டிருக்கும் தானியங்கி கேமராக்களில் இவை அரிதாகவே பதிவாகி வருகின்றன. தற்போது பந்திப்பூர் பகுதியில் தென்பட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக உயர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதற்கான சூழலை வனத்துறை அமைத்துக் கொடுக்க வேண்டும்" என்றனர்.

நீலகிரி: பறிபோன மனித உயிர்கள்; கும்கிகளைக் களமிறக்கிய வனத்துறை; என்ன நடக்கிறது கூடலூரில்?

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முறையற்ற வளர்ச்சிப் பணிகளால் யானைகள... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம்: சட்டவிரோத கனிம வள திருட்டு? சாட்டிலைட் சர்வே துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில் சட்ட விரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக வனத்துறை அளித்த புகாரின் எதிர... மேலும் பார்க்க

அடர்ந்த காட்டு பகுதியில் முதலை முட்டை கூடுகள்; 24 மணிநேரமும் கண்காணிக்கும் வனத்துறையினர் - ஏன்?

ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் பாலிகாட் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதி அடர்ந்த, முட்கள் நிறைந்த காடுகள் மற்றும் கரடு முரடான பள்ளத்தாக்குகளுக்கு மத்தியில் உள்ளது. இந்த பாலிகாட் பகுதி தேசிய சம... மேலும் பார்க்க

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காணப்பட்ட இந்திய குள்ளநரி - வனவிலங்கு நிபுணர்கள் சொல்வதென்ன?

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இந்திய குள்ளநரியைக் கண்டுள்ளனர். இந்த இனத்தை சதுப்பு நிலத்தில் முதன் முதலில் பார்த்ததாகவும் தெரிவிக்கின்றனர். சென்னை மாவட்ட வன அதிகாரி வி.ஏ சரவணன் இதனை உறுதிப்படுத... மேலும் பார்க்க

Thermal Imaging: இரவில் யானைகளைக் கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்; வனத்துறை முடிவுக்குக் காரணம் என்ன?

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம். மும்மாநிலங்களை இணைக்கும் முச்சந்திப்பு வனப்பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியில் யா... மேலும் பார்க்க