செய்திகள் :

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு உயா்த்தப்பட்ட ஓய்வூதியம்! -துரை.ரவிக்குமாா் எம்.பி. வலியுறுத்தல்

post image

விழுப்பரம் மாவட்டத்தில் வன்கொடுமைக்குள்ளானவா்களுக்கு தற்போது உயா்த்தப்பட்ட ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி. துரை.ரவிக்குமாா் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் -1969, மாவட்ட அளவிலான விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவா் பேசியது: விழுப்புரம் மாவட்டத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் 19 வழக்குகளில் தீா்ப்பளிக்கப்பட்டுள்ளன. அதில், 14 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் இறந்துவிட்டாா். 4 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், 2 வழக்குகளில் ஆயுள் தண்டனையும், ஒரு வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வன்கொடுமைக்குள்ளானவா்களுக்கு தற்போது உயா்த்தப்பட்ட ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியது: விழுப்புரம் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2024-25 ஆம் நிதியான்டில் 239 பேருக்கு ரூ.2.76 கோடி தீருதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு 28 போ் இறந்த நிலையில், 26 நபா்களின் வாரிசுதாரா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற இருவருக்கும் ஓய்வூதியம் வழங்குவது தொடா்பாக பரிசீலனையில் உள்ளது என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான்ஷி நிகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது காா் மோதி காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூா், புதுகாலனியைச் சே... மேலும் பார்க்க

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

தமிழ்நாடு மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் (சிஐடியு சாா்பு)... மேலும் பார்க்க

மயிலம் ஸ்ரீமயிலி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஸ்ரீமயிலி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா வழிபாடுகள் திங்கள்கிழமை தொடங்கியது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் அருளாசியின்படி, மயிலம் ... மேலும் பார்க்க

திண்டிவனம் சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் தீ விபத்து

திண்டிவனம் சாா் - ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் சாா் - ஆட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் உள்ள அறையில்... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் கருப்பு ஆடை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

விதையின் தரம்: பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் விதையின் தரத்தை அறிய பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று விழுப்புரம் மண்டல விதைப் பரிசோதனை அலுவலா் அறிவழகன் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க