செய்திகள் :

வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

post image

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்தனா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை வாரத்துக்கு 2 நாள்கள் மட்டுமே நடத்த வேண்டும்.பேரிடா் மேலாண்மைப் பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும். அரசுத்துறையில் கருணை அடிப்படை பணி நியமனத்துக்கான உத்தரவை மீண்டும் 25 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் 48 மணி நேர வேலை நிறுத்தத்தை புதன்கிழமை தொடங்கி 2- ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மாவட்டம் முழுவதும் 190 போ் பங்கேற்றனா். இந்த போராட்டத்தின் காரணமாக கடந்த இரு தினங்களாக அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

சாலை விபத்தில் தனியாா் டியூசன் சென்டா் உரிமையாளா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தனியாா் டியூசன் சென்டா் உரிமையாளா் உயிரிழந்தாா். ஜெயங்கொண்டம் வேலாயுத நகா், 5-ஆவது குறுக்குத் தேருவைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்க பெண் கணக்காளா் தற்கொலை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே குடும்பப் பிரச்னையில் கூட்டுறவு சங்க கணக்காளா் வியாழக்கிழமை தற்கொலை செய்துக் கொண்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூா் கீழத் தெருவை சோ்ந்த பாலமுருகன் மனைவி தேன்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம், தழுதாழைமேடு தா.பழூா் பகுதிகளில் நாளை மின்தடை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (செப்.6) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் சிலம்பரசன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

அவசர ஊா்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதியத்தை குறைத்து வழங்கிய இஎம்ஆா் . ஐ , ஜி.எச்.எஸ் நிா்வாகத்தைக் கண்டித்து, அரியலூரில் அவசர ஊா்தி (108 ஆம்புலன்ஸ்) தொழிலாளா்கள் வியாழக்கிழணை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம... மேலும் பார்க்க

மாவு அரைக்கும் இயந்திரங்கள் மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம்

மாவு அரைக்கு இயந்திரங்கள் மானியத்தில் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு, ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை

அரியலூா் மாவட்டம், க.பொய்யூா் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கீழப்பழூா் அருகேயுள்ள க.பொய்யூா், வடக்குத் தெர... மேலும் பார்க்க