செய்திகள் :

வர்த்தகப் போர் அச்சம்: 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு சந்தைகள் சரிவு!

post image

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கட்டண உயர்வு மற்றும் சீனாவின் பதிலடி ஆகியவற்றைத் தொடர்ந்து உலகளாவிய சந்தை இன்று சரிந்து முடிந்தது.

பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற பதற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் பலரும் தங்களின் லாபத்தை வெளியே எடுத்து வந்ததால், பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு 2,226.79 புள்ளிகள் சரிந்தது 73,137.90 புள்ளிகளாக முடிந்தது முதலீட்டாளர்களுக்கு பதற்றத்தை உருவாக்கியது.

அமெரிக்க வரிவிதிப்பு தொடர்ந்து பிற நாடுகளின் பதிலடி காரணமாக சந்தை சரிந்தது, இது உலக அளவில் வர்த்தகப் போர் ஏற்படும் அச்சத்தையும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் பதற்றமும் உருவாக்கியுள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 71,449.94 என்ற புள்ளிகளில் தொடங்கிய வர்த்தகமான நிலையில், சுமார் 4,000 புள்ளிகள் சரிந்தது.

நண்பகல் 12.10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 3,014.98 புள்ளிகள் சரிந்து 72,349.70 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 971.60 புள்ளிகள் குறைந்து 21,932.85 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 2,226.79 புள்ளிகள் சரிந்து 73,137.90 புள்ளிகளாகவும், நிஃப்டி 742.85 புள்ளிகள் சரிந்து 22,161.60 புள்ளிகளாக நிலைபெற்றது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் தவிர சென்செக்ஸ் பட்டியலில் உள்ள அனைத்தும் பங்குகளும் சரிந்து முடிவடைந்தது. அதிகபட்சமாக டாடா ஸ்டீல் 7.33 சதவிகிதமும், லார்சன் & டூப்ரோ 5.78 சதவிகிதமும் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள டாடா மோட்டார்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, இன்ஃபோசிஸ், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவை பங்குகள் சரிந்து முடிந்தது.

நிஃப்டி-யில் டிரென்ட், டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி உள்ளிட்ட பங்குகள் சரிந்தும், சோமேட்டோ மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை பங்குகள் சற்று உயர்ந்து முடிந்தது.

பிஎஸ்இ-யில் ஸ்மால்கேப் குறியீடு 4.13 சதவிகிதமும், மிட்கேப் குறியீடு 3.46 சதவிகிதமும் சரிந்து முடிந்தது.

சீமென்ஸ், ஜிண்டால் சா, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, தெர்மேக்ஸ், ஸ்வான் எனர்ஜி, நால்கோ, இன்டலக்ட் டிசைன், சோபா, இந்துஸ்தான் காப்பர், சம்மான் கேப்பிட்டல், பாரத் ஃபோர்ஜ், டிஎல்எஃப், கோத்ரேஜ் பிராப்பர்டீஸ், இந்தியாமார்ட் இன்டர்மெஷ், ஸ்டெர்லிங் வில்சன், டிபிஓ டெக், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஜிண்டால் ஸ்டெயின்லெஸ், ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் உள்ளிட்ட 770 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் இன்று 52 வார சரிவைப் பதிவு செய்தது.

ஆசிய சந்தைகளில் ஹாங்காங் 13 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தும், டோக்கியோவின் நிக்கேய் 225 கிட்டத்தட்ட 8 சதவிகிதமும், ஷாங்காய் குறியீடு 7 சதவிகிதத்திற்கும் மேலாகவும், தென் கொரியாவின் கோஸ்பி 5 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்து முடிந்தது.

ஐரோப்பிய சந்தைகளும் இன்று கடும் விற்பனை அழுத்தத்திற்கு உள்ளாகி கிட்டத்தட்ட 6 சதவிகிதம் வரை சரிவுடன் முடிந்தது.

அமெரிக்க சந்தைகள் கடந்த (வெள்ளிக்கிழமை) அன்று கடுமையாக வீழ்ச்சியடைந்து நிலையில் எஸ்அண்ட்பி - 500, 5.97 சதவிகிதமும், நாஸ்டாக் 5.82 சதவிகிதமும், டவ் 5.50 சதவிகிதமும் சரிந்து முடிந்தது.

தொற்று காரணமாக லாக்டவுன் விதிக்கப்பட்ட மார்ச் 23, 2020 அன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 13 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது.

கடந்த ஆண்டு ஜூன் 4 ஆம் தேதியன்று, சென்செக்ஸ் 4,389.73 புள்ளிகள் சரிந்து 72,079.05 ஆக இருந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 6,234.35 புள்ளிகள் சரிந்து 70,234.43 புள்ளிகளாக முடிந்தது. அதே வேளையில் நிஃப்டி 1,379.40 புள்ளிகள் சரிந்து 21,884.50 ஆக முடிவடைந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,982.45 புள்ளிகள் சரிந்து 21,281.45 புள்ளிகளாக இருந்தது.

இன்று மும்பை பங்கு சந்தையானது மலை போல சரிந்து முடிந்த நிலையில், மெட்டல் 6.22 சதவிகிதமும், ரியாலிட்டி 5.69 சதவிகிதமும், பொருட்கள் 4.68 சதவிகிதமும், தொழில்துறை 4.57 சதவிகிதமும், நுகர்வோர் விருப்புரிமை 3.79 சதவிகிதமும், ஆட்டோ 3.77 சதவிகிதமும், வங்கி 3.37 சதவிகிதமும், ஐடி 2.92 சதவிகிதமும், டெக் 2.85 சதவிகிதமும், பிஎஸ்இ ஃபோகஸ்டு ஐடி 2.63 சதவிகிதமும் சரிந்து முடிந்தது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ஒட்டுமொத்த தாக்கம் குறைவாக இருந்தாலும், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த (வெள்ளிக்கிழமை) அன்று ரூ.3,483.98 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 3.61 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 63.21 அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: அமுல் வருவாய் ரூ.1 லட்சம் கோடியை எட்டும்: மேத்தா

ஜேஎஃப்எல் நிறுவனத்தின் வருவாய் 34% உயர்வு!

புதுதில்லி: ஜூபிலன்ட் புட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வருவாய், 2025 மார்ச் காலாண்டில், 34 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,107 கோடி ஆக உள்ளதாக தெரிவித்தது.2025ல் அதன் ஒருங்கிணைந்த வருவாய் 44 சதவிகிதம் உயர்ந்து ... மேலும் பார்க்க

விதிமுறைகளை மீறிய ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸூக்கு ரூ.7 லட்சம் அபராதம்!

புதுதில்லி: ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்திற்கு, பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான, 'செபி' ரூ.7 லட்சம் அபராதம் இன்று விதித்துள்ளது. இந்த அபராதத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று செப... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ.85.82-ஆக முடிவு!

மும்பை: அதிகரித்து வரும் கட்டணப் போர் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் காரணமாக பரவலான உலகளாவிய கொந்தளிப்புக்கு மத்தியில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 38 காசு... மேலும் பார்க்க

வரலாறு காணாத சரிவில் பங்குச் சந்தை! ரூ. 20 லட்சம் கோடி இழப்பு!! காரணம் என்ன?

வாரத்தின் முதல் நாளான இன்று(ஏப்ரல் 7) பங்குச்சந்தைகள் வரலாறு காணாத கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. கடந்த வார இறுதியில் சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை இன்றும் சரிவைச் சந்தித்து வருகிறது. மும்பை பங்கு... மேலும் பார்க்க

கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ் 3,900 புள்ளிகள் சரிவு!

வாரத்தின் முதல்நாளான இன்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் தொடங்கியுள்ளது.அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்பட 60 நாடுகள் மீது வரி விதிப்பை அதிகரிப்பதை அறிவித்த நிலையில் அவை செயல்பாட்டுக்... மேலும் பார்க்க

அமுல் வருவாய் ரூ.1 லட்சம் கோடி எட்டும்: மேத்தா

புதுதில்லி: பால் மற்றும் பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்தியாவின் முன்னணி பால் பிராண்டான அமுல், அதன் வருவாய், நடப்பு நிதியாண்டில், 10 சதவிகிதம் அதிகரித்து, 1 லட்சம் கோடி ரூபாயாக உயரும... மேலும் பார்க்க