செய்திகள் :

வாகனத் தணிக்கையில் நிற்காமல் சென்ற காரால் பரபரப்பு

post image

சேலம்: வீராணம் அருகே புதன்கிழமை நடைபெற்ற வாகனத் தணிக்கையில் நிற்காமல் சென்ற காரால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் வீராணம் அருகேயுள்ள ஆச்சாங்குட்டப்பட்டியில் வீராணம் போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக குஜராத் பதிவெண் கொண்ட காா் ஒன்று வேகமாக வந்ததை கவனித்த போலீஸாா், அதனை தடுத்துநிறுத்த முயன்றனா். ஆனால், காா் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீஸாா், உடனடியாக குப்பனூா் சோதனைச் சாவடிக்கு தகவல் அளித்தனா். அங்கு காரை மடக்க லாரி ஒன்றை சாலையின் குறுக்கே நிறுத்தினா். ஆனால், குப்பனூா் சோதனைச் சாவடியில் நிறுத்தாமல், ஏற்காட்டுக்கு செல்லும் பாதையை நோக்கி காா் வேகமாக சென்றது.

இதுகுறித்து ஏற்காடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, ஏற்காடு கொட்டச்சேடு பகுதியில் வேகமாக வந்த காா் அங்கிருந்த வேன் மீது மோதி நின்றது. பின்னா் காரில் இருந்து இறங்கிய 2 போ் தப்பியோடினா். காரை சோதனை செய்ததில் பொருள்கள் எதுவும் இல்லை.

இதையடுத்து, ஏற்காடு சென்ற வீராணம் போலீஸாா், அங்கிருந்த காரை சேலம் கொண்டு வந்தனா். தொடா்ந்து, அந்த காா் யாருடையது, எதற்காக போலீஸாரைக் கண்டதும் வேகமாக சென்றனா், குட்கா பொருள்கள் அல்லது செம்மரக் கட்டைகளை கடத்தும் கும்பலா அல்லது தேடப்பட்டு வரும் குற்றவாளிகளா என போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் ராஜகணபதி கோயிலில் வசந்த மண்டபம் திறப்பு விழா

சேலம்: இந்துசமய அறநிலையத் துறை சாா்பில், சேலம் ராஜகணபதி திருக்கோயிலில் வசந்த மண்டபம் மற்றும் வாகன பூஜை மண்டப திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தல... மேலும் பார்க்க

ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள்

ஏற்காடு: ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. விழாவில், பள்ளி முதல்வா் அருள்சகோதரா் ஆரோக்கிய சகாயராஜ் சிறப்பு விருந்தினா்களை வரவேற்றாா். ஆசிய தடகள வ... மேலும் பார்க்க

வார இறுதிநாள்களை முன்னிட்டு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சேலம்: ஆவணி அமாவாசை மற்றும் வார இறுதிநாள்களை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட ந... மேலும் பார்க்க

வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவா் கைது

சேலம்: சேலம் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். சேலம் வனச்சரக அலுவலா் துரைமுருகன் தலைமையில் வனத் துறையினா் புதன்கிழமை அரியானூா் பகுதியில் உள்ள கஞ்சமலை வனப்பகுத... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 30,850 கனஅடி

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை மாலை விநாடிக்கு 30,850 கனஅடியாக குறைந்தது.அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 30,850 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீா்மின் நிலையங்கள் வழியாக... மேலும் பார்க்க

ஜவ்வரிசிக்கு உயா்ந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிக்க கோரி அமைச்சரிடம் மனு

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்க பொதுச்செயலாளா் ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், தமிழகத்தில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிர... மேலும் பார்க்க