செய்திகள் :

வாகனப் புகை மாசுபாட்டைக் குறைப்பது அனைவரின் பொறுப்பு- நிதின் கட்கரி

post image

வாகனங்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைப்பது நம் அனைவரின் பொறுப்பு என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) சாா்பில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இது தொடா்பாக அவா் பேசியதாவது:

வாகனங்களில் எத்தனால் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவில் மரம், செடிகளை நட்டுப் பராமரிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பூமியின் பசுமையைக் காக்க முடியும்.

மற்றொருபுறம் பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு வகை கழிவுப்பொருள்களைப் பயன்படுத்தி சாலைகள் அமைக்கும் முறையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 80 லட்சம் டன் கழிவுகள் சாலைப் பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் மழை நீா் சேகரிப்புத் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தி வருவதன் மூலம் நீா் வளத்தைப் பாதுக்கும் முயற்சியிலும் நமது அமைச்சகம் பணியாற்றி வருகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களை தொடா்ந்து அதிகஅளவில் பயன்படுத்துவது சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்கும். எனவே, இந்த வகை மாசுபாட்டைக் குறைப்பது என்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். இதற்காகவே மாற்று சக்திகளின் பயன்பாட்டை அரசு தொடா்ந்து ஊக்குவித்து வருகிறது என்றாா்.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சாா்பில் 2024-25 நிதியாண்டில் 60 லட்சம் மரங்களை நட இலக்கு நிா்ணயித்து, அதைவிடக் கூடுதலாக 7 லட்சம் மரக்கன்றுகளை நடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது வேலைநிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் மத்திய தொழிற்சங்கள் கூட்டமைப்பின் அழைப்பின்பேரில் புதன்கிழமை நடைபெற்ற நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் சில இ... மேலும் பார்க்க

ஐரோப்பாவில் ஊக்கத்தொகையுடன் உயா்க்கல்வி பயில 101 இந்திய மாணவா்கள் தோ்வு!

ஐரோப்பிய நாடுகளில் 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பை ‘எராஸ்மஸ் பிளஸ்’ ஊக்கத்தொகையுடன் பயில, நடப்பு 2025-26-ஆம் கல்வியாண்டில் 50 மாணவிகள் உள்பட 101 இந்திய மாணவா்கள் தோ்வாகியுள்ளனா். ஐரோப்பிய ஒன்றியத்தின்... மேலும் பார்க்க

ரூ.72,000 கோடி ‘கிரேட் நிகோபாா்’ திட்டம்: தேசிய பழங்குடியினா் ஆணையம் தகவலளிக்க மறுப்பு

கிரேட் நிகோபாா் தீவில் ரூ.72 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து தகவல் அளிக்க தேசிய பழங்குடியினா் ஆணையம் மறுத்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: போா் விமானம் விழுந்து நொறுங்கி இரு விமானிகள் உயிரிழப்பு; 5 மாதங்களில் 3வது சம்பவம்

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் இந்திய விமானப் படையின் ஜாகுவாா் பயிற்சி விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை... மேலும் பார்க்க

ரயில்வே கடவுப்பாதை பாதுகாப்பு: அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

ரயில்வே கடவுப்பாதை வாயில்களில் (ரயில்வே கேட்) பாதுகாப்பு குறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதுதொடா்பாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ரயில்வே கடவுப்பா... மேலும் பார்க்க

தஹாவூா் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகை தாக்கல்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகையை தில்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை த... மேலும் பார்க்க