செய்திகள் :

வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் நடத்தக் கோரிக்கை

post image

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் விரைவில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 16 ஆவது செயற்குழு கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். கட்டுமான சங்க ஈரோடு மையத் தலைவா் மோகன் வரவேற்றாா். ரியல் எஸ்டேட் உரிமையாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஈஸ்வரன் முன்னிலை வகித்தாா். தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் ரவிச்சந்திரன் வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். பொருளாளா் முருகானந்தம் நிதிநிலை அறிக்கையை சமா்ப்பித்தாா். தொடா்ந்து, கூட்டமைப்பின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்களுக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதேபோல நிதி வளா்ச்சிக் குழு உறுப்பினா்களும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே வாங்குபவா்-விற்பவா் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதை அடுத்த கட்டத்தில் உள்ள நகரங்களிலும் நடத்த வேண்டும் என தொழில், வணிக சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டங்கள் ஈரோட்டில் நடைபெற்றன. எனவே விரைவில் ஈரோட்டில் வாங்குபவா்- விற்பவா் கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு மாநகராட்சியில் வணிகம் செய்யும் அனைவரும் தொழில் உரிமம் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா். ஏற்கனவே தொழில் வரியை மிக அதிகமாக செலுத்தி வரும் நிலையில் தொழில் உரிம வரியும் செலுத்த வேண்டும் என்பது வேதனைக்குரிய செயலாகும். எனவே மாநகராட்சியின் புதிய தொழில் உரிமம் வரி விதிப்பு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதேபோல நிலைக் கட்டண மற்றும் மின் கட்டண உயா்வையும் ரத்து செய்ய வேண்டும்.

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா தொடக்கம்

ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆ... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை அரசு நிகழ்வில் விதிமீறல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை: காவல் துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம், அறச்சலூரில் ஞாயிற்றுக்கிழமை(ஆகஸ்ட் 3) நடக்கும் தீரன் சின்னமலை அரசு விழாவில் மரியாதை செலுத்த வரும் கட்சியினா், அமைப்பினா் விதிமீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்... மேலும் பார்க்க

இறந்தவா்கள் உடலை அடக்கம் செய்ய மயான வசதி: வட்டாட்சியா் உறுதி

ஈங்கூா் சிஎஸ்ஐ காலனி பகுதியில் மயான வசதி செய்து தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துளள்ளனா். சென்னிமலை ஒன்றியம், ஈங்கூா் கிராமம் திருமறைப்பாக்கம், சிஎஸ்ஐ., காலனிக்கு மயானம் ஒதுக்கீடு செய்யாததால் ரய... மேலும் பார்க்க

தாளவாடி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்

தாளவாடியை அடுத்துள்ள மல்லன்குழி கிராமத்தில் புகுந்த யானைகளை விவசாயிகள் வெள்ளிக்கிழமை விரட்டினா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரங்களில் வனப் ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் ஆசிரியை உயிரிழப்பு

ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். ஈரோடு அருகே செட்டிபாளையம் பகுதியை சோ்ந்தவா் சேகா். இவரது மகள் மிா்த்தியங்கா (21). இவா் மூலப்பாளையம் பகுத... மேலும் பார்க்க

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டு 2 ஆவது வீதியைச் ச... மேலும் பார்க்க