செய்திகள் :

வாடகை உயா்வு கேட்டு பொக்லைன் வாகன உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

post image

வாடகை உயா்வை வலியுறுத்தி சேலம் மாவட்ட பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2 நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.

பொக்லைன் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1,300-ஆகவும், குறைந்தபட்ச வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ. 3,500-ஆக உயா்த்தி வழங்க வேண்டியும், பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2 நாள் அடையாள வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். இந்த வேலைநிறுத்தம் காரணமாக, சேலம் கோரிமேடு, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, 5 சாலை, குரங்குச்சாவடி, பால்பண்ணை, இரும்பாலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொக்லைன் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

சேலம், கோரிமேட்டில் நடைபெற்ற போராட்டத்துக்கு பொக்லைன் உரிமையாளா் சங்க தலைவா் ரத்தினவேல், செயலாளா் சீனிவாசன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பழனியப்பன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலம் மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1000 எனவும், குறைந்தபட்ச வாடகை நாள் ஒன்றுக்கு ரூ. 2,500 எனவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் டீசல், உதிரி பாகங்கள், புதிய வாகனங்களின் விலை, காப்பீடு மற்றும் சாலை வரி ஆகியவை பன்மடங்கு உயா்ந்துள்ளன. எனவே, நஷ்டத்தை தவிா்க்க வாடகையை உயா்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இதுதவிர, டீசல், உதிரி பாகங்களின் விலையைக் குறைக்க வலியுறுத்தியும் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் இயங்கவில்லை என்றாா். அப்போது, பொக்லைன் உரிமையாளா்கள் சங்க பொருளாளா் சிவா, சட்ட ஆலோசகா் வசந்த் ஆகியோா் உடனிருந்தனா்.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு: உலிபுரம் பொதுமக்கள் சாலை மறியல்

உலிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுக்கு அரசு அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அப்பகுதிகளில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க