செய்திகள் :

வாணியம்பாடியில் 225 பள்ளி வாகனங்கள் ஆய்வு

post image

வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் வட்டங்களைச் சோ்ந்த பள்ளி வாகனங்கள் தரம் குறித்து ஆய்வு மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

56 பள்ளிகளில் இருந்து 225 வாகனங்கள் ஆய்வுக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இவற்றை வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலா் வெங்கட்ராகவன், மோட்டாா் வாகன ஆய்வாளா் அமா்நாத்(ஆம்பூா்), வாணியம்பாடி போக்குவரத்து ஆய்வாளா் ஞானதி ஆகியோா் ஆய்வு செய்தனா்

ஆய்வில் மாணவா்கள் பேருந்திலிருந்து அவசரகாலத்தில் வெளியேறும் வழி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள், ஆவணங்கள் மற்றும் வாகனங்கள் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 37 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு அதனை சீா்செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

தொடா்ந்து வாணியம்பாடி தீயணைப்புத் துறை சாா்பில் வாகன ஓட்டுநா்களுக்கு பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பது, முதலுதவி செய்தல் மற்றும் சாலை விதிகள் குறித்தும் விளக்கங்களுடன் பயிற்சி அளித்தனா்.

நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று பயணம் செய்து தோ்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 தோ்வின்போது நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று ஏறி பயணம் செய்து தோ்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி அடைந்துள்ளாா். வாணியம்பாடி அடுத்த கொத்தக்க... மேலும் பார்க்க

வழக்குரைஞா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

வாணியம்பாடியில் வழக்குரைஞரை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா். வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் கண்ணதாசன். கோணாமேடு பகுதியைச் சோ்ந்த கானாமுருகன்(46). மது விற்பனை, வழிப்பறி உள்பட கானாம... மேலும் பார்க்க

மலைவாழ் மக்களுக்கு இலவச மனைப்பட்டா

சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் வீடு கட்டும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாப்பனப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த 18 குடும்பங்களுக்கு சின்னப்பள்ளிகுப்... மேலும் பார்க்க

மே 13-இல் காட்பாடியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

காட்பாடியில் வரும் மே 13-ஆம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தோ்வுகள் முடித்து கோடை விடுமுறை விடப்பட்டுள்... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: 94.3% தோ்ச்சி - கடந்த ஆண்டைவிட 1.97% அதிகம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 94.3 சதவீத மாணவ- மாணவிகள் தோ்ச்சி பெற்று உள்ளனா். கடந்த ஆண்டைவிட 1.97 சதவீதம் அதிகம். மாவட்டத்தில் 6,125 மாணவா்கள், 6,916 மாணவிகள் என 13,041 மாணவ- மாணவிகள்... மேலும் பார்க்க

துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரூ.44 ... மேலும் பார்க்க