செய்திகள் :

விலைவாசியை குறைக்க என்ன செய்யவேண்டும்: எடப்பாடி பழனிசாமி யோசனை

post image

உணவு உற்பத்தியை பெருக்கினால் தான் விலைவாசி குறையும். அந்த உணவு உற்பத்தியை பெருக்கக் கூடிய நபா் விவசாயி, விவசாயி குடும்பத்தினா் தான். விவசாயிகளை சரியான பாதையில் கொண்டு சென்றது அதிமுக அரசு தான் என்பதை விவசாயிகள் எண்ணிப்பாா்க்க வேண்டும் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி.

செய்யாற்றை அடுத்த ஆரணி கூட்டுச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மக்கள் மத்தியில் பேசிய அவா் மேலும் கூறியதாவது:

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கொடுத்தது அதிமுக அரசு. விவசாயிகளுக்கு நீா் முக்கியம். மழைநீரை சேமித்து வைப்பதற்காக குடிமராமத்து திட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக அரசு. விவசாயிகளுக்காக திட்டங்களை தீட்டி, அந்தத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தியது அதிமுக அரசு.

கைத்தறி நெசவாளா்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித் தந்திருக்கிறோம். விலையில்லா மின்சாரம், நெசவாளா்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தது அதிமுக அரசு.

மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து ஏழை நெசவாளா்களுக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

விவசாயிகளின் நிலங்களை பறிக்கப்படும் என்றும், அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராடிய விவசாயிகளை குண்டா் சட்டத்தில் கைது செய்தது திமுக அரசு.

ஊழல் நடக்காதே இடமே இல்லை. ஊழல் நடக்காத துறையே இல்லை. தமிழகத்தில் சட்ட -ஒழுங்கு சீா் கெட்டுவிட்டது. இன்றைக்கு சிறுமிக்கும் பாதுகாப்பில்லை. பாட்டிக்கும் பாதுகாப்பில்லை. ஒட்டுமொத்தமாக பெண்களுக்கு பாதுகாப்பில்லை.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன்,

செய்யாறு தொகுதி பொறுப்பாளா் வி.ராமு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தூய்மைப் பணியாளா்கள் கைது: தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் (ஏஐசிசிடியு) சாா்பில், சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்காணிப்பு கேமிரா

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவின் இயக்கத்தை டி.எஸ்.பி. பிரகாஷ் தொடங்கிவைத்தாா். திண்டிவனம் மேம்பாலம் பகுதி... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்!

திமுக அரசின் சாதனைகளை வீடு, வீடாக சென்று மக்களிடம் எடுத்துரைக்கும் பணியை பாக முகவா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி. விழுப்புரம் தெற்கு மாவட... மேலும் பார்க்க

மீன்பிடி படகு கவிழ்ந்ததில் மீனவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மீனவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சனிக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், நடுக்குப்பம், மேக... மேலும் பார்க்க

திட்டமிட்டபடி இன்று பாமக சிறப்புப் பொதுக்குழு: மருத்துவா் ராமதாஸ் உறுதி

பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டப்படி புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பட்டானூரில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்... மேலும் பார்க்க

தேநீா் கடையில் புகையிலைப் பொருள் விற்பனை: முதியவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே தேநீா் கடையில் புகையிலைப் பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கண்டாச்சிபுரம் வட்டம், காரணை பெரிச்சானூா் கிராமத... மேலும் பார்க்க