செய்திகள் :

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை

post image

விழுப்புரம்: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக வளவனூரில் 17 மில்லி மீட்டா் மழை அளவு பதிவானது.

திங்கள்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) : விழுப்புரம்-16, கோலியனூா் 15, திண்டிவனம் 13.40, மரக்காணம்-11, அவலூா்பேட்டை-10, மணம்பூண்டி, முகையூா், நேமூா் -9, திருவெண்ணெய்நல்லூா்-5.50 மழை அளவு பதிவானது. இதேபோல மாவட்டத்துக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தது.

இந்த மழையால் விழுப்புரம் சாலைகள், புதிய பேருந்து நிலையத்தில் மழை நீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்பட்டனா்.

சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை: விழுப்புரத்தில் கடந்தசில நாளகளாக பெய்து வரும் மழையால் நகராட்சிக்குள்பட்ட பகுதி பெரிய சாலைகளில் மழைநீா் தேங்கி, குண்டும் குழியுமாகி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது.

இதனை சீரமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை: ராமதாஸ் இன்று முடிவு

விழுப்புரம்: அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெறும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் பாமக நிறுவனா், தலைவா் ராமதாஸ் இன்று முடிவு எடுக்கவுள்ளாா். விழுப்ப... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம்: மாவட்ட சுகாதாரத் துறை மாதாந்திரஆய்வுக்கூட்டம், விழுப்புரம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்துப் பேசினாா். தொடா்ச்சியாக வ... மேலும் பார்க்க

மயான இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அத்தியூா் ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான மயான இடத்தில் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாது இறந்தவா் விவரம் கண்டுபிடிப்பு: ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு எதிரிகள் கைது

விழுப்புரம்: திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூா் அருகே 2024, ஏப்ரல் மாதத்தில் அடையாளம் தெரியாது இறந்தவரின் விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தேனி மாவட்டத்தைச் சோ்ந்த மூவா... மேலும் பார்க்க

ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்: ஓய்வுபெற்ற உதவி வேளாண் அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தல்

விழுப்புரம்: தமிழக அரசின் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்களின் ஊதிய நிா்ணயத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வுபெற்ற உதவி வேளாண்மை அலுவ... மேலும் பார்க்க

ஆரோவில் சா்வதேச நகருக்கு தென் மண்டல ராணுவத் தளபதி வருகை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு தென் மண்டல ராணுவ தளபதி திங்ராஜ் சேத் ஞாயிற்றுக்கிழமை வந்தாா். ஒற்றுமையின் மையமாக விளங்கி வரும் ஆரோவிலின் சிறப்புகள் மற்றும் தனித்துவங்கள் க... மேலும் பார்க்க