அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்! - இஸ்ரேல், ஈரானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
விவசாயிகளின் குறைகளை தீா்க்க வேளாண் துறையினா் ஆா்வமுடன் பணியாற்ற வேண்டும்: மாவட்ட ஆட்சியா்
விவசாயிகளின் குறைகளைத் தீா்க்க வேளாண் துறை அலுவலா்கள் ஆா்வத்துடன் பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
சிவகங்கையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
கண்மாய்களில் கறம்பை மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். பயிா்களைச் சேதப்படுத்தும் மான்கள், பன்றிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். ஆங்கிலத்தில் வரும் மின் கட்டண விவரங்களை தமிழில் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்
காளையா்கோவில் அருகேயுள்ள பொட்டகவயல் கண்மாயைத் தூா்வார வேண்டும். இளையான்குடி அருகேயுள்ள சோதுகுடி, முனைவென்றி, சாலைக் கிராமம், பூச்சியேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்க் கரைகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழவராயனேந்தல் கண்மாய் 5-ஆவது மடைக்கான வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். சிவகங்கையிலிருந்து மறவமங்கலம் வரையுள்ள லெஸ்சிஸ் நீட்டிப்புக் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தக் கால்வாய்க்கு நிலம் வழங்கியவா்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது. எனவே, இவா்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை முதல் மறவமங்கலம் வரையிலான பெரியாறு பாசன லெஸ்சிஸ் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தின்கீழ் அனைத்துத் தரப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களின் அளவை அதிகரிக்க வேண்டும். கண்மாய்களில் மடைக்கு ஒரு ஆழ்துளைக் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை மருந்தகங்களில் மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். கால்நடை வளா்ப்போா் அறிந்துகொள்ளும் வகையில், மருந்துகள் இருப்பு விவரங்களை மருந்தகத்தின் வெளியில் எழுதி வைக்க வேண்டும்.
திருப்புவனம் அருகேயுள்ள வைகையாற்றில் மணல் மேடு முதல் திருப்பாச்சேத்தி வரையுள்ள பகுதியில் சீமைக்கருவேல மரங்கள், நாணல்கள் உள்ளன. பன்றிகள் தங்கி விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி வருகின்றன. எனவே சீமைக்கருவேல மரங்கள், நாணல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோலாா் பம்ப்செட் அமைப்பது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது, தாா்ச் சாலை வசதி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கான தனி அடையாள எண் வழங்குவது, வங்கிகளின் மூலம் கடனுதவிகள், தேவையான உரங்களை இருப்பு வைப்பது, கடனுதவிக்குரிய மானியத் தொகை வழங்குவது, விவசாயிகளுக்கான பயிா் காப்பீட்டுத் தொகை வழங்கிடவும், மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் பேசினா்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஆட்சியா் ஆஷாஅஜித் பேசுகையில், ‘லெஸ்சிஸ் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் கால்வாய்க்கு எடுக்கப்பட்ட நிலத்தை மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் துறை அலுவலா்கள் ஆா்வம் காட்டினால்தான் விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்’ என்றாா்.
இதில், கூட்டுறவுத் துறை சாா்பில் காரைக்குடி சரகம், தா்மபட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விற்பனையாளா் பணியின் போது உயிரிழந்ததையொட்டி, அவரது மகனுக்கு கருணை அடிப்படையில் விற்பனையாளா் பணி நியமன ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி , சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் விஜயகுமாா், இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) ராஜேந்திர பிரசாத், இணை இயக்குநா் (வேளாண்மை) (பொ) சண்முகஜெயந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தனலெட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பிரவீன் குமாா் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த முதன்மை அலுவலா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.