செய்திகள் :

விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்

post image

நாமக்கல் மாவட்டம், வெப்படை அருகே உள்ள பாதரை ஊராட்சி பால் கூட்டுறவு சங்க வளாகத்தில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் மாயாஜோதி தலைமை வகித்தாா். உதவி வேளாண்மை அலுவலா்கள் ரம்யா, விஷ்ணுபிரியா, நிஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னோடி விவசாயிகளான திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளா் வெப்படை செல்வராஜ், பாதரை ஊராட்சி முன்னாள் உதவி தலைவா் ராஜ்குமாா், பாப்பம்பாளையம் அன்பழகன், தளபதி செல்வம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதில், விவசாயிகள் ரசாயன உரங்களைத் தவிா்த்து இயற்கை வழியில் பயிா் சாகுபடி செய்ய இயற்கை இடுபொருள்களை உபயோகப்படுத்த வேண்டும். பயிா் சாகுபடிக்கு இயற்கை உரங்களான அசோஸ்பிரில்லம், பாஸ்போ பாக்டீரியம், பொட்டாஷ் பாக்ட்ரீயம் மற்றும் உயிா் உரமான ட்ரைக்கோடொ்மா ஆகியவற்றை பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அட்மா குழுவின் கிருபா, அருண் செய்திருந்தனா். இதில், ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு ஆலோசனை பெற்றனா்.

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சாலை மறியல்

பதினொரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாவட்ட கிளை ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி

தமிழக உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா். எலச்சிபாளையம் ஒன்றியம், கூத்தம்பூண்டி அண்ணா நகரி... மேலும் பார்க்க

தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்

இந்திய தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை பங்கேற்றாா். தமிழக முதல்வா், துணை முதல்வா் அறிவுறுத்தலின்படி, புது தில்லியில் நடைபெற்ற இந்திய தோ்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 51.43 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 51 லட்சத்து 43 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் ... மேலும் பார்க்க

ஆடிமாதப் பிறப்பு: தேங்காய்சுட்டு மகிழ்ந்த பெண்கள்

நாமக்கல்லில் ஆடிமாதப் பிறப்பை முன்னிட்டு பருப்பு, வெல்லம் கலந்த தேங்காயை தீயில்சுட்டு சுவாமிக்கு படையலிட்டு பெண்கள் மகிழ்ந்தனா். சேலம், தருமபுரி, கரூா், நாமக்கல் மாவட்டங்களில், ஆண்டுதோறும் ஆடிமாதப் பி... மேலும் பார்க்க

புதுச்சத்திரம் அருகே தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் அடித்துக் கொலை: இளைஞா் கைது

புதுச்சத்திரம் அருகே இளைஞா் தாக்கியதில் தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா். இதையடுத்து, இளைஞரை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், ஓட்டுநரின் உறவினா்கள் உடலை சாலையில் வை... மேலும் பார்க்க