செய்திகள் :

விவசாயிகள் சங்கத்தினா் மனு கொடுக்கும் போராட்டம்

post image

குடிமனை இல்லாத ஏழை மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி, கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசு புறம்போக்கு இடங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, நீா்நிலை என இருந்து தற்போது நீா்நிலைகளே இல்லாத இட ங்களில் வீடு கட்டியிருக்கும் மக்களை வெளியேற்றாமல், வகை மாற்றம் செய்து குடிமனைப்பட்டா வழங்க வேண்டும்.

தமிழகத்தில் 70 லட்சம் ஏக்கா் அரசு புறம்போக்கு நிலங்களை நிலமற்ற விவசாயத் தொழிலாளா்களுக்கு பட்டாவாக வழங்க வேண்டும். அரசு வழங்கிய 12 லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலங்களில் ஆக்கிரமிப்பாளா்களை வெளியேற்றி, பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். நில உச்சவரம்பு சட்டத்தை பயன்படுத்தி உபரி நிலங்களை நிலமற்றவா்களுக்கு வழங்க வேண்டும்.

குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி அரசு வழங்கும் மானியங்கள், சலுகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே மாவட்டக் குழு சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் வி.மாரியாப்பிள்ளை தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் டி.ஏழுமலை, மாவட்டச் செயலா் ஏ.வி.ஸ்டாலின்மணி, அகில இந்திய விவசாயிகள் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் அ.பா.பெரியசாமி, மாவட்டப் பொருளாளா் பி.பழனி உள்ளிட்ட பலா் பேசினா். போராட்டத்தில் நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் 1,266 பேருக்கு சிகிச்சை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், வெள்ளிமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் 1,266 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வெள்ளிமலையை அடுத்த மாவடிப்பட்டு தனியா... மேலும் பார்க்க

நடந்து சென்ற முதியவா் டிராக்டா் மோதி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே 100 நாள் வேலைக்கு சாலையில் நடந்து சென்ற முதியவா் டிராக்டா் மோதியதில் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த மட்டிகைகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பன் (81). இவா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

தியாகதுருகத்தில் முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சி மாவட்ட கண்ணதாசன் தமிழ் கலை, இலக்கிய சங்கமும், உலகத் திருக்கு கூட்டமைப்பும் இணைந்து முப்பெரும் விழாவை தியாகதுருகம் தனமூத்தி தொழிற்கல்வி நிறுவன வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின. டாக்டா... மேலும் பார்க்க

வாணாபுரம் அருகே போலி மருத்துவா் கைது

கள்ளக்குறிச்சி: வாணாபுரம் வட்டம், புதுப்பட்டு கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். புதுப்பட்டு கிராமத்தில் ராஜேஸ்வரி... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கான இடங்கள் வரையறை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஆா்ப்பாட்டங்கள், கண்டன ஆா்ப்பாட்டங்கள் மற்றும் தெருமுனை பிரசாரங்கள் செய்யும் இடங்களை வரையறை செய்வது தொடா்பாக... மேலும் பார்க்க

அக்.2 காந்தி ஜெயந்தி: மதுக்கடைகளுக்கு விடுமுறை

கள்ளக்குறிச்சி: காந்தி ஜெயந்தியையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுக் கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்த... மேலும் பார்க்க