செய்திகள் :

வீரர்கள் அவர்களை நன்றாக புரிந்துகொண்டால்.... என்ன சொல்கிறார் ராகுல் டிராவிட்?

post image

கிரிக்கெட் வீரர்கள் அவர்களை நன்றாக அறிந்துகொள்ளும்போது அவர்களது திறன் மேலும் அதிகரிப்பதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது.

உங்களை புரிந்துகொள்ளுங்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட் ஜியோஹாட்ஸ்டார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், கிரிக்கெட் வீரர் ஒருவர் அவரது அதிகப்படியான திறனை வெளிப்படுத்த அவரை மிகவும் நன்றாக புரிந்து வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: டு பிளெஸ்ஸியைப் போலவே பேட்டிங் செய்த சிராஜ்..! வைரலாகும் விடியோ!

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நன்றாக கிரிக்கெட் விளையாடுவது, தொடர்ச்சியாக பயிற்சி மேற்கொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால், நான் மிகப் பெரிய வீரர்களுடன் இணைந்து பயணித்தபோது, அவர்களிடம் பொதுவான ஒரு விஷயத்தை என்னால் கவனிக்க முடிந்தது. அவர்கள் யார் என்பதை உண்மையில் அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள்.

நீங்கள் யார் என்பதை நன்றாக புரிந்து வைத்திருந்தால், உங்களது முழுமையான திறனை வெளிப்படுத்த முடியும். சிறந்த கிரிக்கெட் வீரராக மாறுவதற்கான திறமை பலருக்கும் கிடைக்கப் பெற்றுள்ளது. அதனுடன் சிறந்த மனிதராகவும் ஒருவர் வளர வேண்டும். கிரிக்கெட் விளையாடும்போதும், வெளியுலக வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட, ஒருவர் அவரை நன்றாக புரிந்து வைத்திருக்க வேண்டும். உங்களுக்குள் இருக்கும் சிறந்த விஷயத்தை உங்களால் மட்டும் வெளிக்கொண்டுவர முடியும் என்றார்.

தோனியின் ரசிகர்கள் ’தானா சேர்ந்த கூட்டம்!’ - ஹர்பஜன் சிங் புகழாரம்

தோனியின் ரசிகர்கள் ’இயல்பாகச் சேர்ந்த கூட்டம்!’ என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் பற்றி நடைபெற்றதொரு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாரசியமாக பே... மேலும் பார்க்க

அடுத்த கேப்டனுக்கான எதிர்பார்ப்பு அதிகரிப்பு; பும்ராவுக்கு ஆதரவாக வேகப் பந்துவீச்சாளர்!

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அ... மேலும் பார்க்க

மே.இ.தீவுகள் அணியின் கேப்டனாக ராஸ்டன் சேஸ் நியமனம்!

மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ராஸ்டன் சேஸை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகளின் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட்டு வந்த கிரைக் பிரத்வெயிட் க... மேலும் பார்க்க

இவர்களில் ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம், பும்ரா வேண்டாம்: ரவி சாஸ்திரி

இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக யார் நியமிக்கப்படலாம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா ம... மேலும் பார்க்க

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்தியா ஏ அணி அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்தியா ஏ அணியை பிசிசிஐ இன்று (மே 16) அறிவித்துள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ... மேலும் பார்க்க

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் யார்? வாசிம் ஜாஃபர் கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படலாம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பேசியுள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர... மேலும் பார்க்க