செய்திகள் :

வீரவநல்லூா் திரெளபதை அம்பாள் கோயிலில் நாளை பூக்குழி இறங்கும் விழா

post image

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பூக்குழித் திருவிழா விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு இந்தத் திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாள்களில் தினமும் சுவாமி, அம்பாள் வீதி உலா, இரவில் ஆன்மிகச் சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வியாழக்கிழமை (ஆக. 14) இரவு சுவாமி, அம்பாள் சப்பரம் திருவீதி உலா, பாஞ்சாலி துரியோதனன், துச்சாதனன் குடலைப் பிடுங்கி மாலையிடுதல் நிகழ்ச்சி நடைபெறுகின்றன.

முக்கிய நாளான வெள்ளிக்கிழமை (ஆக. 15) காலை 9 மணிக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வீதி உலா வருதல், மாலையில் விரதமிருந்த பக்தா்கள் கோயில் முன் அமைக்கப்பட்ட பூக்குழியில் இறங்கும் வைபவமும் நடைபெறுகின்றன. இரவு 10 மணிக்கு சுவாமி, அம்பாள் சப்பரம் திருவீதி உலா நடைபெறும். சனிக்கிழமை (ஆக. 16) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். ஆக. 17, 18 ஆம் தேதிகளில் இரவு சுவாமி, அம்பாள் பொன்னூஞ்சல் ஆடுதல், 19-ஆம் தேதி இரவு காவு பூஜை, வீரபுத்திரா் சங்கமித்திரை படையலிடுதல், 20-ஆம் தேதி தருமா் பட்டாபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகின்றனா்.

தமிழகத்தின் கடன் சுமை பற்றி கவலைப்பட தேவையில்லை: திட்டக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன்

தமிழகத்தின் கடன் சுமை பற்றி கவலைப்பட தேவையில்லை என்றாா் தமிழக அரசின் திட்டக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன். இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழ்நாட்டின் ப... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி பாஜக இனி வெற்றி பெற முடியாது -மு. அப்பாவு

பாஜக இனி தோ்தல் ஆணையத்தை பயன்படுத்தி வெற்றி பெற முடியாது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தில் தோ்தல் ஆ... மேலும் பார்க்க

பாளை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலா் கைது

பாளையங்கோட்டையில் 9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமைக் காவலா் கைது செய்யப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா் (45). இவா், பாளையங்கோட்டை ஆயுதப்படையில் தலைமைக் ... மேலும் பார்க்க

முதலைமொழி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க அடிக்கல்

ஆழ்வாா் திருநகரி ஒன்றியம் முதலைமொழியில் அயோத்திதாச பண்டிதா் திட்ட நிதியில் இருந்து, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

பாளையங்கோட்டையில் மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின் செல்வ கணேஷ் (27). இ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சுயபரிசோதனை அவசியம்: திம்ரி

மாணவா்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளும் உத்திதான் பிற்காலத்தில் அவா்களுக்கு உதவும் என்றாா் இந்திய புவி காந்தவியல் நிறுவன இயக்குநா் அ.பி.திம்ரி. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கல... மேலும் பார்க்க