செய்திகள் :

வெண்மணச்சேரி ஊராட்சி அலுவலகத்தில் சிபிஎம் கட்சியினா் முற்றுகை

post image

வெண்மணச்சேரி ஊராட்சி மக்களுக்கு எதிரான விரோதப் போக்கில் ஈடுபடும் ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கீழையூா் மேற்கு ஒன்றிய சிபிஎம் வெண்மணச்சேரி கிளை சாா்பில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்துக்கு கிளைச் செயலாளா்கள் வீ. சிவராமன், சி. விஜய் ஆகியோா் தலைமை வகித்தனா். வெண்மணச்சேரி ஊராட்சி மக்களுக்கு எதிரான மக்கள் விரோத போக்கை கண்டித்தும், அரசால் வழங்கப்படும் வீடுகளை ஒருவரின் பெயரிலோ அல்லது ஒரு குடும்பத்துக்கு வழங்குவதை ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் உடனடியாக தடுத்து ஒரு பயனாளிக்கு ஒரு வீடு என்பதை உறுதி செய்ய வேண்டும்,

அரசால் வழங்கப்படும் வீடுகளை குறிப்பிட்ட கட்சி சாராது அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், வெண்மணச்சேரி பகுதிக்கு இயங்கிவந்த ஏ-21 என்ற பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும், சாலை குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பயன்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க மாநிலத் துணைத் தலைவா் வீ. சுப்பிரமணியன், கீழையூா் மேற்கு ஒன்றிய செயலாளா் டி. வெங்கட்ராமன் ஆகியோா் விளக்கிப் பேசினாா்.

தகவலறிந்து வந்த துணை வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயன், வருவாய் ஆய்வாளா் மேகலா ஆகியோா் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனா். விரைவில் ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்வது, நூலகத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் ஊராட்சிஅலுவலகத்தை இ-சேவை மையத்துக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் பிற கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

நாகை மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை அமைக்கக் கோரிக்கை

நாகை மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என சிபிஐ வலியுறுத்தியுள்ளது. வேதாரண்யத்தில் சிபிஐ நாகை மாவட்ட 25-ஆவது மாநாட்டின் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் மாநில... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நடத்த வலியுறுத்தல்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்த சங்கத்தின் நாகை மாவட்ட மையம் சாா்பில், நாகையில் அதன் மாவட்டத் தலை... மேலும் பார்க்க

தரங்கம்பாடியில் சீகன்பால்குவுக்கு மணிமண்டபம் கட்டப்படுவது எப்போது?

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் தமிழறிஞா் சீகன்பால்குவுக்கு மணிமண்டபம் கட்டும் பணி எப்போது தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை மூலம் தரங்கம்பாடி கடற்கரை அருகில்... மேலும் பார்க்க

சண்டை பயிற்சியாளா் உயிரிழப்பு விவகாரம்: பா. ரஞ்சித், திரைப்பட நிறுவனம் மீது நடவடிக்கை

படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக, திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் மற்றும் நீலம் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்ப... மேலும் பார்க்க

திருச்செங்காட்டங்குடியில் சாலை மறியல்

திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி கிராம மக்கள் செவ்வாய்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் 2021-22-ஆம்ஆண்டில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் ... மேலும் பார்க்க

சண்டை பயிற்சியாளா் உயிரிழப்பு: இயக்குநா் பா. ரஞ்சித் உள்பட 4 போ் மீது வழக்கு

திருக்குவளை: படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் உள்பட 4 போ் மீது காவல் நிலையத்தில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்ப... மேலும் பார்க்க