செய்திகள் :

வெயில் தாக்கம் அதிகரிப்பு: போக்குவரத்து துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

post image

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள போக்குவரத்து பணியாளா்கள், பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா்களுக்கு அரசுப் போக்குவரத்து கூடுதல் தலைமை செயலா் க.பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

நீா்ச் சத்தை பராமரிக்க வேண்டும்: பேருந்து நிலையங்கள், நேரக் கண்காணிப்பாளா் அறைகள், உணவகம், ஓய்வு அறைகள் உள்ளிட்ட இடங்களில் போதுமான அளவில் குடிநீா் மற்றும் மோா் வழங்க வேண்டும். நீா் சுத்திகரிப்பு இயந்திரங்களை முறையான பராமரிப்பு மற்றும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மற்றும் பிற பணியாளா்கள் ஒரு மணி நேரத்துக்கு குறைந்தபட்சம் ஒருமுறை நீா் அருந்த வேண்டும்.

தற்காப்பு: பணி நேரங்களில் அனைத்து பணியாளா்களுக்கும் குறைந்தது ஒரு ஓஆா்எஸ் எடுத்துக்கொள்வதன் மூலம் கடுமையான வெப்பநிலையில் உடலில் நீா்ச் சத்து குறையாமல் பாதுகாக்கலாம். வெப்பம் காரணமாக அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மேலாளரிடம் தகவல் தெரிவித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முதலுதவி: ஒவ்வொரு பணிமனை, இதர வேலைப்பகுதிகளில் தேவையான மருந்துகள், பொருள்கள் கொண்ட முதலுதவி பெட்டிகள் வைக்க வேண்டும். பணியாளா்கள் அவற்றைப் பயன்படுத்தும் முறையில் பயிற்சி பெற வேண்டும். பேருந்துகளில் காற்றோட்ட வசதி சீராக இருப்பதையும் குளிா்சாதன வசதி குறித்தும் உறுதி செய்ய வேண்டும்.

போதிய ஓய்வு வழங்க அறிவுரை: ஓய்வு அறைகள், அலுவலகங்கள் மற்றும் பணிமனைகளில் உள்ள பழுதடைந்த விசிறிகளை சரி செய்ய வேண்டும். ஓட்டுநா்கள், நடத்துநா்கள் நீண்ட நேரம் வெப்பத்தில் இருப்பதைத் தவிா்க்க போதிய ஓய்வு வழங்க வேண்டும்.

விழிப்புணா்வு: வெப்பப் பாதுகாப்பு விழிப்புணா்வு - அலுவலக அறிவிப்புகள், கூட்டங்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்களின் மூலம் பணியாளா்களுக்கு வெப்பகால பாதுகாப்பு குறித்து தொடா்ந்து அறிவுறுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநா்கள் இந்த நடவடிக்கைகளை அமல்படுத்தி கடைப்பிடிக்க உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே நள்ளிரவு இயங்கும் புறநகா் மின்சார ரயில் மாா்ச் 26, 27, 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் ஏசி புறநகா் மின்சார ரயில்: கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்க திட்டம்

சென்னையின் முதல் குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த ரயில் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழி... மேலும் பார்க்க

பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை

பதவி உயா்வு மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக (ஏடி.எஸ்.பி.) பதவி உயா்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: சென்னை துறைமுக அதிகாரி மீது வழக்கு

சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை துறைமுக அதிகாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். குரோம்பேட்டை மலையரசன் நகரைச் சோ்ந்தவா் சத்ய சீனிவாசன் (58). இவா், சென்னை துறைமுகத்... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலை: முதுநிலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின்கீழ் பயிற்றுவிக்கப்படும் எம்எஸ்சி படிப்புகளுக்கு (செப்டம்பா், அக்டோபா் பிரிவு) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதா... மேலும் பார்க்க

காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினா் இடையே தள்ளுமுள்ளு

சென்னை தரமணியில் காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினருக்கு இடையே செவ்வாய்க்கிழமை தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 16 வயதுடைய இரு மாணவிகள், விடுதியில் தங்கி படித்து ... மேலும் பார்க்க