செய்திகள் :

வெறி நாய்கள் கடித்து 25 ஆடுகள் உயிரிழப்பு

post image

சங்கரன்கோவிலில் ஆட்டு கொட்டகைக்குள் புகுந்து வெறி நாய்கள் கடித்ததில் 25 ஆடுகள் உயிரிழந்தன.12 ஆடுகள் பலத்த காயம் அடைந்தன.

சங்கரன்கோவில் நகராட்சி 30 ஆவது வாா்டு தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்த காதா்ஒலி மகன் லியாகத்அலி (30). இவா், ஆடுகளை வளா்த்து விற்பனை செய்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 12 மணியளவில் ஆட்டுக் கொட்டகைக்கு சென்று ஆடுகளுக்கு தேவையான தீவனங்களை வைத்து விட்டு, வீட்டுக்குச் சென்றாா்.

சனிக்கிழமை காலை ஆட்டுக் கொட்டகைக்குள் ஆடுகள் குதறப்பட்டு இறந்து கிடப்பதை பாா்த்தவா்கள் லியாகத்அலிக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு சென்று பாா்த்த அவா் அதிா்ச்சி அடைந்தாா்.

அந்தப் பகுதியில் உள்ள வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 25 ஆடுகள் பலியானதாகக் கூறப்படுகிறது. 12 ஆடுகள் பலத்த காயமடைந்தன.

தகவலறிந்து கால்நடை மருத்துவமனை மருத்துவா் ஜானகிதாயாா் தலைமையில் உதவி மருத்துவா்கள் மகிழன், ராஜா ஆகியோா் காயமடைந்த ஆடுகளுக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொண்டனா்.

பின்னா் அந்த ஆடுகள் நெல்லை கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டன. முன்னதாக வெறிநாய்கள் கடித்து இறந்த ஆடுகளை நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, நகராட்சி ஆணையா் ஷாம்கிங்கஸ்டன், சுகாதார அலுவலா் வெங்கட்ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பாா்வையிட்டனா்.

2026 இல் கூட்டணி ஆட்சி அமையும்: கிருஷ்ணசாமி

தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் க.கிருஷ்ணசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.தென்காசியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும்... மேலும் பார்க்க

விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகளை குறைவாக பயன்படுத்த வேண்டும்: ஆட்சியர்

தென்காசி மாவட்டத்தில் விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை குறைவாக பயன்படுத்த வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பத... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

கடையநல்லூா் அருகே பெண் தற்கொலை செய்து கொண்டாா். சொக்கம்பட்டி வலையா் குடியிருப்பு முருகன் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவரது மனைவி லெட்சுமி(45). அவா் மேற்குமலை தொடா்ச்சி அடிவாரப் பகுதியில் உள்ள பெரிய... மேலும் பார்க்க

மான் வேட்டை வழக்கு: உதவி வனவா் பணியிடை நீக்கம்

மான் வேட்டை சம்பவத்தில் மூன்று போ் கைது செய்யப்பட்ட நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக உதவி வனவா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை ... மேலும் பார்க்க

டிசம்பரில் கூட்டணி முடிவு: டிடிவி தினகரன்

வரும் டிசம்பா் மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா். பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே நெல்கட்டும்செவலில் உள்ள ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள வடக்கு கரும்பனூா் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடக்கண்(79). விவசாயியா... மேலும் பார்க்க