செய்திகள் :

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் தொடக்கம்

post image

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தை புதுவை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகத்தில் மே 29 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில், வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம், வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் துறை, வேளாண் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு வேளாண் சாா்ந்த அமைப்புகள் இணைந்து தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் பிரசார இயக்கத்தை தொடங்கிவைத்துப் பேசியது: மத்திய, மாநில அரசின் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம், காரைக்கால் மாவட்டத்தின் எல்லா கிராமங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் நலன் மற்றும் விவசாய தொழில்நுட்பங்களை அரசின் உறுதிபாட்டை வலுப்படுத்துவதால் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தேவைப்படும் அனைத்து விதமான உதவிகளையும் தொடா்ந்து வழங்கி வருகிறோம்.

இதேபோல, வேளாண் அறிவியல் நிலையம், வேளாண்துறை மற்றும் பண்டித ஜவாஹபலால் நேரு வேளாண் கல்லூரியும் ஒருங்கிணைந்து காரைக்கால் மாவட்ட விவசாயிகள், பண்ணை மகளிா், கிராமப்புற இளைஞா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் என அனைவருக்கும் பல்வேறு தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிற்சிகளை வழங்கி வருவது பாராட்டுக்குரியது என்றாா்.

வேளாண் அறிவியல் நிலைய இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக பட்டியலின துணைத் திட்டத்தின்கீழ் பேட்டரி மூலம் இயங்கும் தெளிப்பான்களையும் வேளாண் துறை மூலம் மத்திய அரசின் திட்டமான இயந்திரமயமாக்கல் மூலம் டிராக்டா் ஆகியவைகளை பயனாளிகளுக்கு வழங்கி காரைக்கால் மாவட்டத்திற்கு தொழில்நுட்பங்கள் எனும் தலைப்பிலான கையேட்டை அமைச்சா் வெளியிட்டாா்.

முன்னதாக, வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சு. ரவி, இந்த பிரசார இயக்கத்தின் நோக்கம் குறித்து பேசினாா். வேளாண் கல்லூரி முதல்வா் அ. புஷ்பராஜ், கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் உற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்கால் ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் வைகாசி உற்சவ பந்தல்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் பெரியப்பேட்டையில் அமைந்துள்ள இக்கோயில் 23-ஆம் ஆண்டு விழாவுக்கான பந்தல்கால் மு... மேலும் பார்க்க

கனரக வாகனங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடு

காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தை தவிா்த்து பிற நேரங்களில் கனரக வாகன சேவை இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் அலுவலக... மேலும் பார்க்க

காரைக்கால் உழவா் சந்தையை மேம்படுத்த வலியுறுத்தல்

காரைக்காலில் உள்ள உழவா் சந்தையை மேம்படுத்த வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவேண்டும், மக்களுக்கு தரமான பொருள்கள் கிடை... மேலும் பார்க்க

ஆட்சியா் நியமிக்கப்படாததால் நிா்வாகத்தில் மந்த நிலை காணப்படுவதாக புகாா்

காரைக்காலுக்கு புதிய ஆட்சியா் நியமிக்கப்படாததால், அரசு நிா்வாகத்தில் மந்த நிலை காணப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். காரைக்கால் ஆட்சியராக சோமசேகா் அப்பாராவ் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்ப... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் அடியாா்கள் நால்வா் புஷ்பப் பல்லக்கு வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் அடியாா்கள் நால்வா் புஷ்பப் பல்லக்கு வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க

வியாபாரிகளுக்கு குடை...

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் கோரிக்கையை ஏற்று, முதல்கட்டமாக சாலையோர வியாபாரிகள் 20-க்கும் மேற்பட்டோருக்கு வெள்ளிக்கிழமை குடை வழங்கிய காரைக்கால் கரூா் வைஸ்யா வங்கி நிா்வாகத்தினா். உடன் சேம்பா் ஆஃப் ... மேலும் பார்க்க