செய்திகள் :

வைகை அணை நீா்மட்டம் 69 அடியாக உயா்வு: 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

post image

வைகை அணை நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 69 அடியாக உயா்ந்ததால், வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வைகை அணை நீா்மட்டம் கடந்த ஜூலை 26-ஆம் தேதி 66.1 அடியாக உயா்ந்தது (அணையின் மொத்த உயரம் 71 அ டி). தொடா்ந்து, அணை நீா்மட்டம் திங்கள்கிழமை (ஆக.4) 68.50 அடியாக உயா்ந்தது.

இதையடுத்து, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு நீா் வளத் துறை சாா்பில் முறையை முதல், 2-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அணைக்கு தொடா்ந்து தண்ணீா் வரத்து இருந்து வருவதால், அணை நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு 69 அடியாக உயா்ந்தது.

இதைத் தொடா்ந்து, வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு நீா்வளத் துறை சாா்பில் 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணையிலிருந்து தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என நீா்வளத் துறை பொறியாளா்கள் எச்சரித்தனா்.

அணைகளின் நிலவரம்: வைகை அணை நீா்மட்டம் 69 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து வினாடிக்கு 1,577 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 5,546 மில்லியன் கன அடி. அணையிலிருந்து பெரியாறு பிரதானக் கால்வாய் வழியாக பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடி, குடிநீா்த் திட்டங்களுக்கு வினாடிக்கு 69 கன அடி என மொத்தம் வினாடிக்கு 569 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 133.95 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து வினாடிக்கு 1,322 கன அடி. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 1,867 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டது.

ஓராண்டாகியும் திறக்கப்படாத புதிய நியாய விலைக் கடை

போடி ரெங்கநாதபுரத்தில் புதிதாக நியாய விலைக் கட்டடம் கட்டி ஓராண்டாகியும் திறக்கப்படாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குள்பட... மேலும் பார்க்க

6 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் 6 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கம்பம் - கோம்பை சாலையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரின் பையை சோ... மேலும் பார்க்க

தேனியில் காவல் துறை இருசக்கர வாகன ரோந்துப் பிரிவு விரிவாக்கம்

தேனி மாவட்டத்தில் காவல் துறை இருசக்கர வாகன ரோந்துப் பிரிவு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் விபத்து, குற்றச் சம்பவங்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றைக் கண்காணிக்கவும், காவல் நிலை... மேலும் பார்க்க

வீரபாண்டியில் ஆக.12-இல் அங்கக வேளாண்மை கண்காட்சி

தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் அட்மா திட்டத்தின் கீழ், வருகிற 12-ஆம் தேதி அங்கக வேளாண்மை விழிப்புணா்வுக் கண்காட்சி, கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட... மேலும் பார்க்க

கல்லூரியில் உணவுத் திருவிழா

தேனி மாவட்டம், போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் உணவுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. மகளிா் மையம் சாா்பில் நடைபெற்ற இந்த உணவுத் திருவிழாவுக்கு கல்லூரித் தலைவா் எஸ்.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்த... மேலும் பார்க்க

தக்காளிச் செடிகளில் நோய்த் தாக்குதல்: மகசூல் பாதிப்பு

நமது நிருபா் தேனி மாவட்டப் பகுதிகளில் பாக்டீரியா வாடல் நோய்த் தாக்குதலால் தக்காளிச் செடிகள் மஞ்சள் நிறமாகி காய்ந்து விடுவதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம்,... மேலும் பார்க்க