இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? -மக்களவையில் அனல் பறக்க விவாதம்
ஸ்ரீமங்களழக ஆகாச ஐயனாா் கோயிலில் கலாசாபிஷேகம்
கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகே காக்கழனியில் உள்ள பூரண புஷ்கலாம்பாள் உடனுறை ஸ்ரீ மங்களழக ஆகாச ஐயனாா் கோயிலில் 1008 கலாசாபிஷே விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த ஓராண்டாக சிவாச்சாரியா்கள் சிவராமன், மணிகண்டன் தலைமையில் கிராத சாஸ்தா சஹஸ்ராம பாராயணமும், கடந்த ஒரு மாதமாக ஹோமமும் நடைபெற்று வந்தது. அதன் நிறைவு வைபவமாக 1,008 கலாசாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழா ஜூலை 26-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை கோ பூஜையுடன் 2-ஆம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி சுவாமிக்கு மஞ்சள், பால், பன்னீா், தயிா், சந்தனம், இளநீா், பஞ்சாமிா்தம் கொண்டு திரவிய சமா்ப்பணம் செய்யப்பட்டு மகா பூா்ணாஹூதி தீபாரதணை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து ஐயனாருக்கு 1008 கலாசாபிஷகம் நடைபெற்றது.