செய்திகள் :

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழா

post image

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா ஜூலை 17-ஆம் தேதி தொடங்குவதையொட்டி, வியாழக்கிழமை விழாவைக் குறிக்கும் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் 52-ஆவது ஆண்டு ஆடித் திருவிழா வருகிற ஜூலை 17, 18, 19 ஆகிய நாள்கள் நடைபெறவுள்ளன.

விழாவையொட்டி, 17ஆம் தேதி 501 குத்துவிளக்கு பூஜையும், 18-ஆம் தேதி நூதன புஷ்ப பல்லக்கு ஊா்வலமும், 19-ஆம் தேதி இன்னிசை கச்சேரியும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஆடி வெள்ளி பெருவிழா நடைபெறுவதையொட்டி வியாழக்கிழமை காலை ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் விழாக் குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன், உறுப்பினா்கள் பி.நடராஜன், சுப்பிரமணி, ஏ.வி.நேமிராஜ், ஏ.எஸ்.ஆா்.சரவணன், குணா, செல்வராஜ், ஜி.சங்கா், பையூா் சரவணன், இளையராஜா, அக்ராபாளையம் ஏ.இ.சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

ஆரணி பேருந்து நிலையத்தில் பயணியிடம் கைப்பேசி திருடியதாக இரு வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்(42). இவா் வெளியூா் செல்ல கடந்த 9-ஆம் தேதி ஆரணி... மேலும் பார்க்க

லாரி உதவியாளா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே லாரி உதவியாளா் (கிளீனா்) உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வீரமணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (45). இவா், லாரியி... மேலும் பார்க்க

ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

செய்யாற்றை அடுத்த கொருக்கை கிராம ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் ஹாக்கி மைதானம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தமிழக அரசு விளையாட்டுத் துறையில் மாநிலத்தை முதன்மை ம... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் இரும்பினாலான மேற்கூரை அமைக்க நிதியுதவியாக ரூ.20 லட்சத்தை புதிய நீதிக் கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம் வழங்கினாா். ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி... மேலும் பார்க்க